Skip to main content

இஸ்லாமிய சமுதாயத்திடம் சமாதானம் பேசி மூதாட்டி உடலை புதைக்க வைத்த அதிகாரிகள்

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி புதுமனை பகுதியை சேர்ந்தவர் கனகம்மாள். 70 வயதை கடந்த இவர் வயது முதிர்வு காரணமாக செப்டம்பர் 4ந்தேதி இறந்து விட்டார். இவரது உடலை ஐாப்ராபாத்-பள்ளிப்பட்டு இடையே உள்ள புதுமனை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா இடம் - அதாவது அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைப்பதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தனர். இதனையறிந்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு வந்து இது தனியாருக்கு சொந்தமான இடம் என்றும், இதன் அருகே குடியிருப்பு பகுதி இருப்பதால் இங்கு புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

i

 

இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி தாலூகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசாரும், வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

i

 

அப்போது அங்கு வருவாய்துறை அதிகாரிகள், ஜாப்ராபாத்திலிருந்து வந்து எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரிடம் சம்பந்தப்பட்ட இடம் 2003 ஆம் ஆண்டு பள்ளிப்பட்டு மற்றும் மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மயானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையறிந்த சம்பந்தபட்ட நில உரிமையாளர் நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். 2 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் ஆஜராகாததால் அரசுக்கு சாதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது.

 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அருகாமையில் உள்ள ஏரிகளிலும், இதர பகுதிகளிலும் இதுநாள் வரையில் தங்கள் பகுதியில் இறப்பவர்களை அடக்கம் செய்தும், எரியூட்டியும் வந்தனர். நீர்நிலைப்பகுதிகளில் பிணங்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஏற்கனவே அரசின் சார்பில் மதனாஞ்சேரி அருந்ததியினர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த பிணத்தை புதைக்க ஈடுப்பட்டுள்ளனர் என அவர்களிடம் விளக்கி கூறினார்கள். மேலும் இந்த இடம் தொடர்பாக ஏதாவது தேவைபடின் நீதிமன்றத்தை அணுகும்படி கூறியதையடுத்து 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனையடுத்து கனகம்மாள் உடலை மாலை 4 மணியளவில் புதைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்த அதிகாரிகள்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Officials watched the recipe video at the Farmers Grievance Meeting

 

வேலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் செல்போனில் சமையல் குறிப்பு பார்த்துக் கொண்டிருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, அது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வந்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் சீரியசாக நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட சிலர் செல்போனில் யூடியூபில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

காவலரை பிளேடால் தாக்கிய இளைஞர்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

vellore district, gudiyatham police incident

 

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் ஜோதிமடம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நவீன். இவர் அக்டோபர் 1- ஆம் தேதி இரவு குடித்துவிட்டு, அந்த பகுதி பொதுமக்களிடம் தகராறு செய்துக்கொண்டு இருந்துள்ளார். இதுதொடர்பாக, அப்பகுதி கடைக்காரர்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

 

அதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் இருந்து அருள்கண்மணி என்கிற காவலர் வந்துள்ளார். அங்கு பைக்கில் வந்த அருள்கண்மணி, நவீனிடம் “ஏய் பிரச்சனை செய்யாம வீட்டுக்கு போடா” எனச்சொல்லியுள்ளார். “நீ என்னடா என்னை போடான்னு சொல்றது” என காவலரிடம் தகராறு செய்ய, அப்போ ஸ்டேஷனுக்கு வா என இழுத்துள்ளார்.

 

என்னையே ஸ்டேஷனுக்கு கூப்பிடறயா எனச்சொல்லி பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடு எடுத்த நவீன், காவலர் அருள்கண்மணியை நோக்கி வீச, அது காவலர் இடது கன்னத்தைக் கிழித்து ரத்தம் வந்தது. பிளேடு கிழித்த வலியால் அருள் துடிக்க துவங்கினார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதிர்ச்சியாகி அதனை பார்த்து நின்றுள்ளனர்.

 

என்னை இன்னோரு முறை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டிங்கன்னா இதான் நிலைமை என எச்சரித்துவிட்டு அங்கிருந்து போயுள்ளான். அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் காவலரை, மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

இந்த தகவல் குடியாத்தம் காவல்நிலைய அதிகாரிகளுக்கு செல்ல அதிர்ச்சியாகியுள்ளனர். உயர் அதிகாரிகள் தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி, பொது இடத்தில் போலீஸ் மீது கைவைச்சவனை இன்னுமா அரஸ்ட் செய்யவில்லை எனக்கேட்க, இரவோடு இரவாக நவீனை காவல் நிலையத்துக்கு தூக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.