Skip to main content

ஏட்டு உத்தரவை மதித்த இன்ஸ்பெக்டர்; கைது செய்யச்சொன்ன நீதிபதி

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

 


வேலூர் மாநகரத்தை அடுத்த பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதை கடந்த ராமதாஸ். சி.எம்.சி மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு ஒய்வு பெற்றுள்ளார். இதே தெருவில் ராமதாஸ் வீட்டுக்கு அருகில் சித்ரா என்கிற பெண்மணி தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி பல இளைஞர்கள், சில வழக்கறிஞர்கள் வந்து நள்ளிரவுக்கு பின் திரும்பி செல்கின்றனர்.

 

hc


இவரது வீட்டிற்கு வந்து இறங்கும் அரசின் ரேஷன் அரிசி இரவு நேரத்தில் ஆட்டோ மூலமாக கடத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். அதில் குடிபொருள் புலனாய்வு பிரிவினர் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.


கடந்த ஜனவரி மாதம், இரவு 9 மணியளவில் தனது வீட்டுக்கு ராமதாசின் மகன் வந்தபோது சில இருசக்கர வாகனங்கள் தெருவை அடைத்துக்கொண்டு நின்றுள்ளது. இதுதொடர்பாக வண்டியை ஓரமாக நிறுத்த வேண்டியதுதானே என கேள்வி எழுப்பியுள்ளனர். இது வாய் சண்டையாக மாறியுள்ளது.


அந்த பெண்மணி தனது வீட்டுக்கு வருபவர்களிடம், ராமதாசை மிரட்டிவிட்டு செல்லுங்கள் எனச்சொல்ல சிலர் மிரட்டல் தெனியில் பேசிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். ஒருமுறை சில வழக்கறிஞர்கள் குடித்துவிட்டு ராமதாஸ், அவரது மனைவி மற்றும் மருமகளை மோசமான வார்த்தையில் பேசி தாக்கியுள்ளனர். இதில் ராமதாஸ்க்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார் ராமதாஸ். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் அந்த காவல்நிலையத்தின் எஸ்.பி ஏட்டு தீனதயாளன் என்பவர் தடுத்துவந்துள்ளார். எஸ்.பி ஏட்டு வின் உத்தரவை இன்ஸ்பெக்டரும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்கு அடுத்து வந்த இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் எஸ்.பி ஏட்டு உத்தரவை ஏற்றுக்கொண்டு, அந்த பெண்மணிக்கும், தாக்கிய சில வழக்கறிஞர்களுக்கும் ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் தடுத்துவந்துள்ளார்.


இதனால் பாதிக்கப்பட்ட ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை அறிக்கையோடு காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். மூன்று முறை உத்தரவிட்டும் உயர்நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஆஜராகாததால், நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆய்வாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வேலூர் எஸ்.பி பர்வேஷ்குமார்க்கு ஆகஸ்ட் 19ந்தேதி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ்.


அந்த உத்தரவில் ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிரப்பித்து உத்தரவிட்டுள்ளார். ஆய்வாளர் அண்ணாதுரை தற்போது அந்த காவல்நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு அரக்கோணம் சரகத்தில் பணியாற்றுவதாக கூறுகின்றனர் காவல்துறை தரப்பில்.


பாதிக்கப்பட்ட ராமதாஸ் குடும்பத்தை சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு கும்பல் வந்து மிரட்டிவிட்டு சென்றுள்ளது. இதுப்பற்றி மீண்டும் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வைத்துள்ளனர் என்கின்றனர் அந்த குடும்பத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.