Skip to main content

மாதா சிலைக்கு செருப்பு மாலை; இந்து முன்னணியை சேர்ந்த சேர்ந்த 6 பேர் கைது

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

 

கர்நாடகா மாநிலம் கே.ஜி்.எப் நகரை சேர்ந்த சூசையப்பா நகரில் வசிக்கும் தேவசகாயம் ஜோசப் தலைமையில் 40 பேர் கொண்ட கிருஸ்துவர்கள் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு மாதா சிலையை ஒரு வாகனத்தில் வைத்து பாதயாத்திரையாக வந்தனர்.

 

m


வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள பங்களாமேடுக்கு ஆகஸ்ட் 17ந்தேதி இரவு வரும்போது, வழியில் மடங்கிய அதேபகுதியை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பிரபு, சிவக்குமார், சிங்காரவேலன், சாமூண்டிஸ்வரன், மணி, இளங்கோவன் என 6 பேரும் பாதயாத்திரையாக வந்த குழுவிடம் தகராறு செய்துள்ளனர். அதோடு, அந்த சிறிய வண்டியை உடைத்ததோடு, மாதா சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

 

மாதா சிலை மற்றும் வண்டியை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில், பாத யாத்திரை வந்த கிருஸ்துவர்கள் குழு புகார் எழுதி தந்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலிசார் சம்மந்தப்பட்ட 6 பேரை கைது செய்தனர்.    அவர்களை ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கதிரவன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்த அதிகாரிகள்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Officials watched the recipe video at the Farmers Grievance Meeting

 

வேலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் செல்போனில் சமையல் குறிப்பு பார்த்துக் கொண்டிருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, அது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வந்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் சீரியசாக நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட சிலர் செல்போனில் யூடியூபில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

காவலரை பிளேடால் தாக்கிய இளைஞர்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

vellore district, gudiyatham police incident

 

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் ஜோதிமடம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நவீன். இவர் அக்டோபர் 1- ஆம் தேதி இரவு குடித்துவிட்டு, அந்த பகுதி பொதுமக்களிடம் தகராறு செய்துக்கொண்டு இருந்துள்ளார். இதுதொடர்பாக, அப்பகுதி கடைக்காரர்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

 

அதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் இருந்து அருள்கண்மணி என்கிற காவலர் வந்துள்ளார். அங்கு பைக்கில் வந்த அருள்கண்மணி, நவீனிடம் “ஏய் பிரச்சனை செய்யாம வீட்டுக்கு போடா” எனச்சொல்லியுள்ளார். “நீ என்னடா என்னை போடான்னு சொல்றது” என காவலரிடம் தகராறு செய்ய, அப்போ ஸ்டேஷனுக்கு வா என இழுத்துள்ளார்.

 

என்னையே ஸ்டேஷனுக்கு கூப்பிடறயா எனச்சொல்லி பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடு எடுத்த நவீன், காவலர் அருள்கண்மணியை நோக்கி வீச, அது காவலர் இடது கன்னத்தைக் கிழித்து ரத்தம் வந்தது. பிளேடு கிழித்த வலியால் அருள் துடிக்க துவங்கினார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதிர்ச்சியாகி அதனை பார்த்து நின்றுள்ளனர்.

 

என்னை இன்னோரு முறை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டிங்கன்னா இதான் நிலைமை என எச்சரித்துவிட்டு அங்கிருந்து போயுள்ளான். அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் காவலரை, மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

இந்த தகவல் குடியாத்தம் காவல்நிலைய அதிகாரிகளுக்கு செல்ல அதிர்ச்சியாகியுள்ளனர். உயர் அதிகாரிகள் தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி, பொது இடத்தில் போலீஸ் மீது கைவைச்சவனை இன்னுமா அரஸ்ட் செய்யவில்லை எனக்கேட்க, இரவோடு இரவாக நவீனை காவல் நிலையத்துக்கு தூக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.