Skip to main content

ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி நீர் ரயில் மூலம் சென்னைக்கு வந்தது;சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் 

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 


தமிழக தலைநகரான சென்னையில் வசிக்கும் மக்கள் குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். எப்போதாவது வரும் தண்ணீரை பிடிக்கும் சண்டையில் கத்தி குத்துவரை சென்றது. இதுப்பற்றி  பல தரப்பிலும் இருந்து கேள்விகள் எழுப்பிய பின்பே, தமிழகத்தை ஆளும் அதிமுக, நடவடிக்கையில் இறங்கியது.

j


வேலூர் மாவட்டத்துக்கு காவிரி நதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. இந்த தண்ணீரே வேலூர் மாவட்ட மக்களுக்கு பற்றவில்லை என புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் தினம் தினம் போராட்டம் நடைபெற்றுவருகிறது தண்ணீருக்காக.


இதனை கவனத்தில் கொள்ளாமல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேன்கள் மூலமாக கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டு இதற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன.

j


இந்நிலையில் ஜீலை 12ந் தேதியான இன்று ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாரபூர்வமாக 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில்வேயின் 50 வேன்களில் கொண்டு செல்லும் நிகழ்வை தொடங்கிவைத்தனர் அதிகாரிகள். இன்று காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது. தற்போது சென்னைக்கு தண்ணீர் சென்று சேர்ந்தது. இந்த தண்ணீர் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கைது செய்யப்பட்ட அதிமுக மா.செ... தொண்டர்கள் சாலை மறியல்!

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

admk person Arrested ... Volunteers block the road!

 

வேலூர் டு காட்பாடி இடையே காட்பாடி ரயில்வே நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது.  இந்த பாதை ஆந்திரா மாநிலத்திற்குச் செல்லும் முக்கிய பாதையாகும். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து திருப்பதி செல்லும் பாதையும் இதுதான்.

 

50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ரயில்வே மேம்பாலம் தற்பொழுது பழுதடைந்து உள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே காட்பாடி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

கடந்த அதிமுக ஆட்சியில் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது. இருந்தும் அந்தப் பாதை மிக மோசமான நிலையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில் அந்த மேம்பாலத்தைச் சீர்படுத்த வேண்டும் என அந்த கோரிக்கையை அடுத்து வேலூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே நிர்வாகம் இணைந்து அந்த மேம்பாலத்தைச் சீர் செய்திடும் பணியில் ஈடுபட்டது.

 

இதற்காக கடந்த 10 தினங்களுக்கு மேலாக அந்த ரயில்வே மேம்பாலம்  செல்லும் வாகனங்கள் பாதை மாற்றி விடப்பட்டன.  தற்பொழுது அது ஓரளவு பணி முடிந்த நிலையில் ஜூன் 29 ஆம் தேதி மேம்பாலத்தின் தாங்கும் திறனை சோதனை செய்தனர். அதில் திருப்தி ஏற்பட்டதும் முதல் கட்டமாக ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தை அனுமதிக்கலாம் எனத் திட்டமிட்டனர். இதை வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் அறிக்கையாக வெளியிட்டார்.

 

இந்நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி காலை 10 மணி அளவில் அதிமுக வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் அப்பு, தன் கட்சியினருடன் சென்று அந்த மேம்பாலத்தில் ரிப்பன் கட்டி திறப்பு விழா செய்தார். அதோடு காட்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான துரைமுருகனையும் விமர்சனம் செய்தார். மேம்பாலம் செப்பனிடும் பணியை  வேகமாக செய்யவில்லை எனக் குற்றம் சாட்டி பேசினார்.

 

இது ஆளுங்கட்சியான திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது. இதுதொடர்பாக இன்று மாலை காட்பாடி வருவாய்த்துறை சார்பில், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  அந்த புகாரின் அடிப்படையில் மாநகரச் செயலாளர் அப்புவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்படி அழைத்து வரும் போது தன் காவல் நிலையத்திற்கு வரமாட்டேன் என அப்பு தகராறு செய்துள்ளார். அதனை கண்டு கொள்ளாமல் காவல்துறை அவரை காவல் நிலையம் அழைத்து வந்தது. இந்த தகவல் தெரிந்து அதிமுகவினர் வேலூர் டூ காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியை பெரும் பரபரப்பில் உள்ளது.


 

Next Story

வெள்ளத்தில் சிக்கித் தவித்த குட்டி நாய் - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய 'மீட்பு'

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Puppies trapped in the flood! -Fighting rescue troops!

 

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில், காட்பாடியில் வெள்ளத்தில் சிக்கிய தாய் நாய், அதன் குட்டிகளுடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

Puppies trapped in the flood! -Fighting rescue troops!

 

Puppies trapped in the flood! -Fighting rescue troops!

 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாலாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த வெள்ளத்தில் தாய் நாயும், அதன் குட்டிகளும் சிக்கிக்கொண்ட அலறின. அதனைத் தூரத்திலிருந்து கண்ட மக்கள், பேரிடர் மீட்புக் குழுவினருக்குத் தெரிவித்தனர். வெள்ளத்திற்கு நடுவிலிருந்த புதர் ஒன்றில் நாயும் குட்டியும் சிக்கிக்கொண்ட நிலையில், நீரைக் கடக்க முயன்ற நாய்க்குட்டி தண்ணீரில் அடித்து சிறிது தூரம் சென்றது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாகச் செடிகளைப் பிடித்து மீண்டும் அதேபோன்ற புதரில் சிக்கியது. உடனடியாக உள்ளே இறங்கிய மீட்புப் படையினர், கயிற்றைப் பயன்படுத்தி தாய் நாயையும் குட்டி நாய்களையும் காப்பாற்றினர். 

 

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், வெள்ளத்தின் தன்மை அறியாது எப்படியாவது கடந்துவிடலாம் என குட்டி நாய் நீரில் இறங்க.. அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் நபர் பதற்றத்தில், ''அடடா ஆண்டவா... காப்பாத்தி விட்ரலாம்'' எனக் கூறுவது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.