Skip to main content

கழிவுநீர் கால்வாயில் வீசி பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்

Published on 19/05/2019 | Edited on 20/05/2019

 


கல் மனம் கொண்ட தாய்மார்கள் இன்னமும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள் சில மக்கள்.


வேலூர் மாவட்டம், ஆற்காடு – ஆரணி சாலையில் அரிசி, நெல் மண்டி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு முன்பாக நீண்ட தூரத்துக்கு திறந்தவெளி கால்வாய் செல்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது.

 

c


மே 19ந்தேதி மாலை அந்த வழியாக சென்றவர்களின் கவனத்தை அந்த கால்வாய் ஈர்த்தது. பச்சிளம் குழந்தை பிறந்து  ஓரிரு நாளே ஆன குழந்தை கால்வாயில் இறந்துபோய் தலை குப்புற கிடந்தது. அதோடு அதன் உடல்களில் அங்கங்கு கொசுக்கள், ஈக்கள், எறும்புகள் தின்றதால் ஓட்டைகள் விழுந்திருந்தன. பார்க்கவே அகோரமான நிலையில் அந்த குழந்தையின் உடல் இருந்தது. இதனைப்பார்த்து அவ்வழியா சென்றவர்கள் கண்ணீர் வடித்தனர்.

 

கால்வாயில் குழந்தை இருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே ஆற்காடு நகர காவல்நிலையம் உள்ளது. அங்கு சென்று தகவல் தர, அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர். அந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் யார், குழந்தை எங்கு பிறந்தது, இங்கு தான் குழந்தையை வீசினார்களா, வேறு எங்காவது வீசியது தண்ணீரில் அடித்துக்கொண்டு இங்கு வந்தது என விசாரிப்பதோடு, அந்த சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்கவும் முடிவு செய்துள்ளனர்.


பிறந்தவுடனே குழந்தையை கால்வாயில் போட்டு கொலை செய்யும் அளவுக்கு ஒரு தாய் இருக்கிறாள் என்றால் அந்த தாயை மட்டும்மல்ல அவளது குடும்பம், இதற்கு காரணமானவர்களை சிறையில் தள்ள வேண்டும் என்றார்கள் மக்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.