Skip to main content

வேலம்மாள் கல்வி குழும தலைவர் சிறைபிடிப்பு! வருமான வரித் துறையினர் ரெய்டு!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

வேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி  வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்காவது தளத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ளார் குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம்.

மேலும்,  இவரது செகரட்டரி மற்றும் கேஷியர் ஆகிய இரண்டு பெண்கள் அதே இடங்களில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.  திடீரென, அதிரடியாக வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்துவதற்கு என்ன காரணம் என்று நாம் விசாரித்தபோது, பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

 

Vellammal Education Group Leader Captured; Income Tax Department Raid!

 

மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் டொனேஷன் வசூலித்தது உள்ளிட்ட கணக்கில் வராத பணத்தை கார்களில் பதுக்கி வைத்திருப்பதாக மதுரையில் உள்ள வருமானவரித்துறையினருக்கு புகார் வந்ததால் அந்த அடிப்படையில் இப்படி ஒரு அதிரடி ரெய்டு நடந்து  கொண்டிருக்கிறது.

குறிப்பாக வேலம்மாள் கல்வி குழுமத்தின் வாகனங்களை சோதனையிட்டு கொண்டிருக்கிறார்கள். வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இதுகுறித்து வேலம்மாள் கல்வி குழுமத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது வருமான வரித்துறை. வேலம்மாள் கல்வி குழுமம் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸே கைகட்டி நிற்கக் கூடிய அளவுக்கு செல்வாக்கு வாய்ந்தவர்தான் வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம். தன்னுடைய மருத்துவமனையில் பல பேரை வேலைக்கு எடுத்துவிட்டு அதை கணக்கு காட்டி கோடிக்கணக்கில் தனியார் நிறுவனங்களிடம் கடன் வாங்கிவிட்டு காரணங்கள் இல்லாமலேயே அவர்களை விரட்டுவதும் தொடர் கதையாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் நிலவியிருக்கிறது.

மேலும்,  சமீப காலங்களாக வேலம்மாள் கல்விக் குழுமம் பல்வேறு தனியார் பள்ளிகளை டேக் அவர் செய்து கொண்டிருக்கிறது. அதாவது,  தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இவ்வளவு பணம் வேலம்மாள் குழுமத்திற்கு ஏது?  இதன் மூலம் கருப்பு பணம் விவகாரம் இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது . அதாவது, அரசியல்வாதிகளுடைய கருப்புபணம் இதிலேயே வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறதா என்கிற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“திருமாவளவனின் வெற்றியைத் தடுக்க தேர்தல் அலுவலகத்தில் சோதனை” - விசிக குற்றச்சாட்டு

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Vck allegations Raiding election office to prevent Thirumavalavan victory

சிதம்பரம் புறவழிச்சாலை அருகே நடேசன் நகரில் கட்சியின் நிர்வாகி முருகானந்தன் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பிரச்சாரம் முடிந்து இரவு நேரங்களில் தங்குகிறார். இந்த வீடு தேர்தல் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (9.10.2024) மாலை 7 மணியிலிருந்து எட்டு மணி வரை 7 பேர் கொண்ட குழுவினர் வருமான வரித்துறை என்றும் சரியான பதில் கூறாமல் தொல். திருமாவளவன் தங்கி இருக்கும் அறை மற்றும் அந்த வீடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லை.  இது குறித்து அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தாங்கள் சோதனை செய்தது குறித்தும் இங்கு எதுவும் இல்லை என கடிதமாக கொடுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கொடுக்கிறேன் என மழுப்பலாக சென்றுள்ளனர்.

vck

இதுகுறித்து சோதனையின் போது உடன் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கௌதம் சன்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், “திடீரென ஏழு பேர் கொண்ட குழுவினர் தலைவர் தங்கி இருந்த வீட்டிற்குள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது அறை உள்ளிட்ட வீட்டிலிருந்த அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். வழக்கமாக தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்வது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது வருமானவரித்துறையினர் திருமாவளவனின் வெற்றியை அச்சுறுத்தும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலகத்தில் சோதனை செய்தது தலைவரை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் உள்ளது.  இதனால், அவரது வெற்றியைத் தடுக்க முடியாது” எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், விவசாய அணி மாநில நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்