Skip to main content

வேளாங்கண்ணி லாட்ஜில் கொலை; தடுக்க சென்ற அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து!!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
Velankanni

 

 

வேளாங்கண்ணி தனியார் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. 

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியார் விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளில் பல வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கரோனாவால் அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். சுற்றுலா பயணிகளும், மாதா ஆலயத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்ததால், சில தனியார் லாட்ஜ்க்கள் மட்டும் போலிஸாருக்கு கப்பம் கட்டிவிட்டு மறைமுகமாக நடத்தி வருகின்றனர்.

 

அப்படி செயல்பட்டு வந்த ஜான்சன் பார்க் எனும் தனியார் விடுதியில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முகுந்தடபுரம் பகுதியை சேர்ந்த முகேஷ் (32) என்பவரும், சேலம் மாவட்டம் காந்திநகர் பழைய காலனி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 36 என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்திருக்கிறது.

 

இந்த நிலையில் 11 ம் தேதி இரவு முகேஷ், சதீஷ்குமார் இருவரும் பணியில் இருக்குப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி திடீரென அடிதடி வரை சென்றது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதை அருகே உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த சாம்சன் பிராங்கிளின் என்பவர் ஓடிவந்து விலகிவிட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த முகேஷ் தன் கையில் வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரை சரமாரியாக குத்த, அந்த கத்தியை பறிக்க முயன்ற சாம்சன் பிராங்கிளினுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

 

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிராங்கிளின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். சாம்சன் பிராங்கிளின் வேளாங்கண்ணி அதிமுக நகர செயலாளராக இருந்து வருகிறார்.

 

முகேஷ் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் தனியார் விடுதிகள் இயங்கக்கூடாது என அறிவுறுத்தியிருந்தும் காவல்துறையின் அலட்சியத்தாலும், கையூட்டுப் பெற்றுக்கொண்டு திறக்கவிட்டதன் விலைவு கொலையில் முடிந்திருக்கிறது" என்கிறார்கள் அப்பகுதிவாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.