Advertisment

பால் ஊட்டியதில் மார்பு வலி ஏற்பட்டதால் பெற்ற கைக் குழந்தையை கொன்று யாரோ திருடியதாக நாடகமாடிய தாய் கைது!! வேளச்சேரியில் பரபரப்பு

காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கிய வேளையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வீடு புகுந்து மர்ம நபர்கள்திருடி சென்றதாக பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் பெற்ற தாயே குழந்தையை கொன்றுவிட்டு யாரோ திருடியதாக நாடகமாடியதுதற்போது வெளிச்சத்திற்கு வந்துபெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

child

சென்னைவேளச்சேரியில் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் தரைதளத்தில் வசித்து வரும் வெங்கண்ணா உமா தம்பதியருக்கு கடந்த மதாம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நேற்றுமுன்தினம் காற்று வரவில்லை என குழந்தையின் பெற்றோர்கள் கதவை திறந்து வைத்துதூங்கியதாகவும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்க்கையில் அருகில் தூங்கி கொண்டிருந்தகுழந்தையை காணவில்லை எனவும்வெங்கண்ணா உமா தம்பதியர்இருவரும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வேளச்சேரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிகாலையில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றைமார்பில் அணைத்தபடி சென்றதை கண்டு அந்த பெண்தான் குழந்தையை திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்க அந்த தெரு மற்றும் அந்த பெண் சென்ற சாலை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணையின் முடிவில் பெற்ற தாயே குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.

Advertisment

murder

குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுதுமார்பில் வலி இருந்ததால் பால் கொடுக்க மறுத்துள்ளார் உமா. மேலும் அந்த வலியை போக்க மருந்துகள் எடுத்துக்கொண்டு வந்துள்ளார். இந்த மருந்துகளால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என அந்த மருந்தையும்எடுத்துகொள்ள கணவர்வெங்கண்ணா தடைவிதித்ததால் தொடர்ந்து குழந்தைக்கு பால் ஊட்டமார்பு வலிஏற்பட்டதாலும், கணவர் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறியதாலும் ஆத்திரமடைந்நத தாய் உமாவே தனது ஒரு மாத ஆண் குழந்தையைகொன்று ஏரியில் வீசியஅதிர்ச்சி சம்பவம் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய் உமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

velacherry police murder child
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe