வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன! (படங்கள்)

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி எண்- 92இல்இன்று (17/04/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கிய மறு வாக்குப்பதிவு, இரவு 07.00 மணிக்குநிறைவுபெற்றது. 548 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில், 186 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மறுவாக்குபதிவான இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவான வாக்கு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றது சர்ச்சையாகியிருந்த நிலையில், இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

tn assembly election 2021 velacherry
இதையும் படியுங்கள்
Subscribe