ADVERTISEMENT
கடந்த ஒருமாதமாக பாஜக சார்பாக நடைபெற்று வந்த வேல் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவு பெற உள்ளது.
ADVERTISEMENT
தமிழக பாஜக சார்பாக தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை பேரணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 6ம் தேதி திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை அறுபடை வீடுகள் வழியாக பயணித்து இன்று திருச்செந்தூர் வர இருக்கிறது. இன்றுடன் இந்த யாத்திரை நிறைவு பெற உள்ளதாக மாநில பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். நிறைவு நாளான இன்று ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த யாத்திரையில் கலந்து கொண்டு விழாவை நிறைவு செய்ய உள்ளார்.
Show comments