Skip to main content

ஊரடங்கில் தொடரும் வாகன சோதனை... அலறும் கிராமப்புற மக்கள்...

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

Vehicle Testing


கரோனா பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறை நீட்டிக்க தொடங்கியதில் இருந்து ஊரடங்கில் இருந்து பலவித தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடைகளில் பணிபுரிய செல்லலாம், பொருட்கள் வாங்கச் செல்லலாம் என பல தளர்வுகள்.
 


முதல் முறை ஊரடங்கு அமல்படுத்தியபோது, அநாவசியமாக இளைஞர்கள் உட்பட பெரியவர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றுகிறார்கள் என வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யத் துவங்கினர். தற்போது வரை அந்த நடைமுறை தொடர்கிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 82 நாட்களில் 43,505 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45,735 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் மூலம் 34,908 இருசக்கர வாகனங்கள், 185 ஆட்டோ, 184 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 35,277 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 14.06.2020 தேதி மட்டும் 707 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 707 பேர் கைது செய்யப்பட்டு, 289 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 295 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

 


வழக்குப் போடவேண்டும், நாங்கள் சின்சீயராக வேலை பார்க்கிறோம் பாருங்கள் என உயர் அதிகாரிகளுக்குக் காட்டுவதற்காகத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். வழக்குகளைப் பதிவு செய்யும்போது, நகர்ப் பகுதியில் அநாவசியாகச் சுற்றுபவர்களைப் பிடித்து வழக்குப் போடுவது மிகமிகக் குறைவு. கிராமத்தில் இருந்து காய்கறி விற்பனைக்காக, மின்மோட்டர் ரிப்பேர்க்காக, மருத்துவமனைக்கு என நகர்ப் பகுதியை நோக்கி வருபவர்களில் அழுக்கு உடை அணிந்துக்கொண்டோ அல்லது பார்ப்பதற்கு ஏமாளியாக இருப்பவர்களை ஓரம் கட்டி வழக்குகள் பதிவு செய்துவருகின்றனர். இது பெரும்பான்மை மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.