Skip to main content

போராட்டத்தின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்... மீட்டுத்தரக் கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானா அந்த கொடூர நிகழ்வுக்கு உரிய விசாரணை வேண்டி போராடிய சில அமைப்புகளின் தலைவர்கள் அப்போது கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி ஈரோடு காளைமாடு சிலை அருகே கடந்த 3ஆம் தேதி அருந்ததியின இளைஞர் பேரவை அமைப்பாளர் வடிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி ஆர்பாட்டம் செய்த 11 பேரை போலீஸ் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தது. பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, நேற்று  விடுதலையாகி வந்தனர்.

 

vehicle seized during protest near kovai

 



இந்நிலையில் 11 பேரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிளி்ல் வந்தபோது, அந்த நான்கு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஈரோடு போலீசார் திருப்பி தரவில்லை. இதனால் தங்களது வாகனங்களை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் மனு கொடுத்தனர். 

பின்னர் "ஆர்பாட்டம், உண்னாவிரதம் போன்ற ஜனநாயக வழி போராட்டத்திற்கே ஈரோடு போலீஸ் தடை விதிக்கிறது. அப்படியும் போராட்டத்தில் ஈடுபட முயன்றால் எங்களைப் போல் கைது செய்து சிறையில் போடுகிறார்கள். நீதிமன்றம் சென்று வாதாடிதான் நாங்கள் பினையில் வெளிவந்தோம். இதில் எப்படிப் பார்த்தாலும் போராட்டம் நடத்த முற்பட்டது நாங்கள் தான் நாங்கள் கொண்டு வந்த வாகனம் எந்த சட்ட மீறலையும் செய்யவில்லை. ஆனால் அந்த வாகனங்களை எதற்காக  பறிமுதல் செய்தார்கள் என்று தெரியவில்லை. இப்போது எங்கள் வாகனங்களை கேட்டு எஸ்.பி.யிடம் மனு கொடுத்துள்ளோம் அடுத்து சட்ட நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.