Advertisment

வீராணம் ஏரிப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்?

ddd

Advertisment

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் லால்பேட்டையில் இருந்துவீராணம் ஏரியின் நீண்ட கரை துவங்கி, சேத்தியாத்தோப்பு வரை நீண்டு செல்கிறது. திருசின்னபுரம் ஊரை ஒட்டிச் செல்கிறது. இதன் அருகில் ஏரி கரையோரம் தண்ணீரில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து அருகில் உள்ள புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த ஆணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா? யாராவது கொலை செய்து இங்கே கொண்டுவந்து ஏரிதண்ணீரில் வீசிச் சென்றார்களா? இப்படிப் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்தவரின் உடலில் அரைக்கால் பேண்டும் பனியனும் அணிந்திருந்தார். இது குறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் வீராணம் ஏரியில் ஆண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Lake veeranam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe