Skip to main content

திருச்சியில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் திமுகவுக்கு ஆதரவு!

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

திருச்சி மாவட்டத்தை சுற்றியுள் 5 மாவட்டங்களில் முத்தரையர் சமூக மக்கள் பரவலாகவும் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். இவர்களை சுற்றி தான் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் இருக்கும். இவர்களுக்கு அதிமுக, திமுக கட்சிகளில் முக்கியம் கொடுக்கப்பட்டு வருவது வழக்கம் சமீபத்தில் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் அரசியல் உரிமை மீட்பு மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அதன் நிறுவன தலைவர் செல்வகுமார். 

 

elec

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டதற்கு எங்களின் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக முதல்வர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களைச் செய்துவிட்டு எங்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளை அறுவடை செய்வது இனி நடக்காது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வரும் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் எங்கள் வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கத்துக்கு வாய்ப்பு வழங்கினால் அந்தக் கட்சிகளுக்கு எங்களின் ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்." என ஆவேசமாக பேசினார். அறிவித்தார். 

 

இதற்கு இடையில் திருச்சி மக்களவைத் தொகுதியில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் போட்டியிடுவதுடன், பெரம்பலூர் தொகுதியில் அதிமுக-வுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சி. கருப்பையா (39). வீர முத்தரையர் சங்கத்தை கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி அதன் நிறுவனத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட புதன்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய போது… 

 

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் முத்தரையர்கள் வசித்து வருகின்றனர். 

 

முத்தரையர்கள் பெரும்பான்மையாக உள்ள திருச்சி மக்களவைத் தொகுதியின் பிரதிநிதியாக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் இடம் பெற்று, நாடாளுமன்றத்தில் எங்களது சமூக குரலை ஒலிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோம். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என்றார் .

 

இந்த நிலையில் நாடாளுமன்ற பிரச்சாரத்தை திருவாரூரில் துவங்கிய திமுக ஸ்டாலின் தற்போது திருச்சியில் தங்கியிருந்து இன்று மாலை பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஐ.ஜே.கே. பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முசிறியில் இன்று பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். 

elec

 

இந்த நிலையில் வீரமுத்திரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் கே.என்.நேருவின் அழைப்பின் பெயரில் தி.மு.க. தலைவரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து திருச்சியை சுற்றி உள்ள 7 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறோம் என்றார். ஆதரவு தெரிவித்த செல்வகுமாரை இன்று முசிறியில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.