Skip to main content

பாலப்பணிகளை கிடப்பில் போட்டுவிட்டு, படகுவிட்டு பரிகாரம் தேடும் அதிமுக அரசு!!

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

வேதாரண்யம் அருகே அவுரிக்காடு-வண்டல் கிராமமக்கள், மழை நீர் பெருக்கெடுத்துள்ள அடப்பாற்றின் குறுக்கே பயணிக்க ஏதுவாக கட்டணம் இல்லாத படகுப் போக்குவரத்து திட்டத்தை அறிமுக செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

 

 நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வண்டல், குண்டூரான்வெளி கிராமங்கள் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெள்ளநீரால் சூழப்பட்டு மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நிகழ்வுகளில் ஒன்று.  

 

BRIDGE

 

வண்டல், குண்டூரான்வெளி கிராமத்தினர் பள்ளிக்கூடம் கல்லூரி மற்றும் வேலைவாய்ப்பு, வெளியூர் உள்ளிட்ட  பல்வேறு தேவைகளுக்காக வெளியில் செல்ல அப்பகுதியின் நடுவே ஓடும் அடப்பாற்றைக் கடந்தே அவுரிக்காடு என்னும்  கிராமத்தின் வழியே வெளியிடங்களுக்கு செல்லவேண்டியுள்ளது.

 

இந்நிலையில்,  அடப்பாற்றின் குறுக்கே 8 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு கிடப்பில் இருக்கும்பாலம் கட்டும் பணி முடிவடையாத நிலையில், இடையில் பேய்த கனமழையின் காரணமாக தண்ணீரின் அளவு அதிகரித்ததால் மக்கள் நடந்து செல்வவே முடியாத நிலையானது. இந்த சூழலில் தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் கண்ணாடியிழைப் படகு ஒன்று இயக்கப்பட்டனர் அதற்கு மக்கள் கட்டணம் செலுத்தியே பயணித்து வந்தனர்.

 

இதையடுத்து, கட்டணம் இல்லாத படகுப் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்திவந்தனர். அதன் பிறகே மீன்வளத்துறையின் சார்பில் கட்டணம் இல்லாத கண்ணாடியிழைப் படகு சேவையை அடப்பாற்றின் குறுக்கே தொடங்கியுள்ளனர்.  

 

எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட பாலபணிகளை முடிக்க முடியாத அதிமுக அரசு, அமைச்சர் ஒ.எஸ்.மணியன் இலவச படகு மூலம் பரிகாரம் தேடுக்கிறார். அமைச்சரின் சொந்த ஊருக்கே இப்படி என்றால்  மற்ற ஊர்களின் நிலமையை கேட்கவே வேண்டும், என கிண்டலடிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.