Skip to main content

வேதாரண்யம் - மக்களுக்கு பயந்து சுவர் ஏறி குதித்து ஓடிய அமைச்சர் ஓ.எஸ். மணியன் - மு.க.ஸ்டாலின் தாக்கு

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
M. K. Stalin



கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும் என்பதுதான் எல்லோருடைய கருத்து. மழைக்காலம் வருவதற்கு முன்பே கால்வாய்களை, ஏரிகளை, ஆறுகளை சுத்தம் செய்கின்ற அந்தப் பணிகளை இந்த அரசு முறையாக நடத்திடவில்லை. 8 மாவட்டங்களை பொறுத்தவரையில் இந்த புயலின் காரணத்தினால் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதற்கு உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
 

வீடுகள் இடிந்த காரணத்தினால் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இருக்கக்கூடிய முகாம்களில் அவர்கள் இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. உடனடியாக இந்த புயலினால் ஏற்பட்ட இழப்பீடை தயாரித்து அதற்கு உரிய இழப்பீடை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கிட வேண்டும்.

 

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார். அவருடைய சொல் சொல்லோடு நின்றுவிடக்கூடாது. செயல்வடிவத்திலே இருக்க வேண்டும். ஏற்கனவே இறந்துபோனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதுபோதுமானதாக இல்லை. 25 லட்சம் ரூபாய் அவர்களுக்கு வழங்க வேண்டும். இறந்துபோனவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

 

​os manian 009


 

புயலினால், மழையினால் பாதிக்கப்பட்ட பல இடங்களை பார்வையிட்டேன். குறிப்பாக வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் பார்வையிட்டேன். அந்த தொகுதியில் ஆங்காங்கே உள்ள கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் ஏன் சாலை மறியல் என கேட்டபோது, இந்த தொகுதியின் எம்எல்ஏ, அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எங்கேயும் பாதிப்பு கிடையாது என்று அறிக்கை வெளியிடுகிறார். சகஜ நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று தவறான அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். இப்படி சொல்லிவிட்டு மெயின்ரோடு வழியாக போய்க்கொண்டிருக்கிறாரேயொழிய எங்கள் கிராமப்பகுதியில் எந்த இடத்திற்கும் வந்து அவர் பார்வையிடவில்லை. அப்படி அவரை வழிமறித்து நாங்கள் அழைத்த நேரத்தில் இல்லை நான் வரமுடியாது என்று மறுத்திருக்கிறார். 
 

அதுமட்டுமல்ல, இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு அமைச்சர், சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களிடத்தில் சமாதானம் செய்ய முடியாத சூழ்நிலையில் அவர் வந்த அரசாங்கத்தின் காரையே அப்படியே சாலையில் விட்டுவிட்டு சுவர் ஏறி குதித்து ஓடியிருப்பதாக அப்பகுதி மக்களெல்லாம் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்கள். 
 

இன்றோடு 3வது நாள். நியாயமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்திருக்க வேண்டும். அவர் வராதது கண்டத்திற்கு உரியது. இனிமேலாவது உடனடியாக அவர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதோடு அல்லாமல், அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாட்டுப் பொங்கல் நாளில் களை கட்டிய மீன் விற்பனை

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Sale of  fish on Mattu Pongal day

இன்று தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் விழா கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் வேதாரண்யத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் திரண்டனர். இதனால் அதிகப்படியான மீன் விற்பனை நடைபெற்றது.

வேதாரண்யம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக கூடினர். வஞ்சிரம், காலா, வாலை, அயிலை, திருக்கை,சங்கரா, வவ்வால், நெத்திலி, கிழங்கான் ஆகிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். வௌவால் மீன் கிலோ ரூபாய் 1100 க்கும், வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், இறால், நண்டு ஆகியவை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சில பகுதிகளில் மாட்டுப்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கும் நிலையில் மீன் வியாபாரம் இன்று களைகட்டியுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் உள்ள பெரியார் மீன் அங்காடியிலும் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, சண்டை உள்ளிட்ட மீன்கள் மட்டுமல்லாது கடல் மீன்களும் விற்பனைக்கு குவிக்க வைக்கப்பட்டது. விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்த போதிலும் மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் இன்று அலை மோதியது.

Next Story

தொடர் தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

serial attack; Case against Sri Lankan pirates

 

அண்மையாகவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்துவரும் நிலையில், அதேநேரம் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

 

அண்மையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள வானவன் மகாதேவி கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற இரண்டு தாக்குதல் சம்பவங்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.