சென்னை மெரினா லூப் சாலை நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரை உள்ள மீன் கடைகள் மற்றும் உணவகங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக்கண்டித்து, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர்தொல். திருமாவளவன் நேற்று (18.04.2023) தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களைசந்தித்து தனது ஆதரவைத்தெரிவித்துப் பேசினார். மேலும்முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மீனவர்களின் கோரிக்கை முன் வைக்கப்படும் என்றும் கூறினார்.