வாழப்பாடி கூ. ராமமூர்த்தியின் 85-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இன்று (18.01.2024) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே. சந்திரமோகன் தலைமையில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.பாஸ்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து, வாழப்பாடி கூ. ராமமூர்த்தியின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வுகளில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மற்றும் காங்கிரஸ் செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.