Skip to main content

தமிழர், கன்னடர் இன மோதலை தூண்டும் வாட்டாள் நாகராஜ்!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்பின் சதி செயலால் தமிழர், கன்னடர்களுக்குள் இன மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தையடுத்த தாளவாடி மலைப்பகுதி, தமிழகம் - கர்நாடகம் ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது. தமிழகம் - கர்நாடகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ராமபுரம் என்ற இடத்தில் தமிழ்நாட்டின் நுழைவு எல்லையில் ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் வரவேற்புப் பலகை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை ஆகிய இரண்டும் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

 

கடந்த 10ம் தேதி மாலை கன்னட அமைப்பினரால் இந்த பெயர் பலகைகள் சேதப்படுத்தப்பட்டன. கர்நாடகாவைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கன்னட சலுவாலியா கட்சி தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் 40க்கும் மேற்பட்ட அவரது கட்சியினர் தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களைக் கிழித்தும், மற்றோரு பெயர்பலகையை அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தி கீழே தள்ளிவிட்டனர். மேலும் அவர்கள் கன்னட மொழியில் கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, தமிழகத்தைச் சேர்ந்த ஊரான தாளவாடியை "தாளவாடி கர்நாடகாவுக்கு சேர்ந்தது" எனவும் கோஷமிட்டனர்.

 

வனத்துறை, வருவாய் துறை, தோட்டக்கலை துறை, காவல் துறை என இரு மாநில அரசுகளின் துறை ரீதியான அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்கள் மத்தியிலும் இன பேதமோ, எல்லை பிரச்சனையோ எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்த சூழலில், கன்னட வாட்டாள் நாகராஜ் குரூப் திட்டமிட்டே பகைமையும் அதன் மூலமாக கலவரம் செய்யவும் இச்செயலை அரங்கேற்றியுள்ளது.

 

இதுகுறித்து விசாரணை செய்த தாளவாடி போலீசார், வாட்டள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 பேர் மீது தமிழக அரசின் பொது சொத்தை தேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர். 

 

இதற்கிடையே இந்த பரபரப்பு ஓய்வதற்குள், 17 ம் தேதி மாலை தாளவாடியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், தமிழக கர்நாடக மாநில வனப்பகுதியின் எல்லையில் உள்ள பைனாபுரம் என்ற கிராமம் அருகே எத்திக்கட்டையில் தமிழக அரசின் ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிய வரவேற்பு பலகையும், நெடுஞ்சாலைத் துறையின் எல்லை முடிவு பலகையும் சில மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது மேலும் கொந்தளிப்பையும்  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்தச் சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை எனவும், அதற்கு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தாளவாடி போலீசார் கூறுகின்றனர். இரு மாநில எல்லைப்பகுதியான பைனாபுரம் கிராமம் எத்திக்கட்டை, அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதாலும், ஆள் நடமாட்டம் அங்கு இல்லாததாலும், யார் இந்த பலகைகளை சேதப்படுத்தியிருப்பார்கள் என்பது மர்மமாக இருந்தாலும் இதுவும் கன்னட அமைப்பின் வன்முறைக்கான சதி செயல்தான்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசோ, உயர் அதிகாரிகளோ இதற்கு எந்த கன்டன குரலும் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம், கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு இருப்பதால்தான். பா.ஜ.க. மேலிடத்திற்கு கட்டுப்படுவதாக இருந்தாலும், இனவெறியை ஏற்படுத்தும் வன்முறை கும்பலைக் கண்டிக்க வேண்டாமா? என தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.