வாஸன் ஹெல்த் கேர் குழும உரிமையாளர் அருண் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தற்காலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து விசாரிக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள வாஸன் மெடிக்கல்களுக்கு மருந்து மாத்திரைகள் சப்ளை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தாங்கள் சப்ளை செய்த மருந்து மாத்திரைகளுக்கான நிலுவை தொகையினை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று அருண் இல்லத்தில் கூடிவற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அவரது தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. மேலும் திருச்சியில் மட்டும் இவருக்கு சொந்தமான வாஸன் கண் மருத்துவமனை, எ.பி.சி. மருத்துவமனை, 13 வாஸன் மெடிக்கல்கள் செயல்பட்டு வருகிறது.