Advertisment

கிராம உதவியாளராக நியமிக்காததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! -தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு!

கிராம உதவியாளராக நியமிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

vao officer dharmapuri collector chennai high court

தர்மபுரி மாவட்டம்- பாலக்கோடு வட்டத்தில் கிராம உதவியாளராகத் தன்னை நியமிக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர், கடந்த 2007- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், அவரை கிராம உதவியாளராக நியமிக்கும்படி, தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிக்கு கடந்த 2007- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமல்படுத்தாததால், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக துரைராஜ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில், 2019- ஆம் ஆண்டு வரை பாலக்கோடு பகுதியில் கிராம உதவியாளர் பதவிக்கு யாரும் நியமிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

vao officer dharmapuri collector chennai high court

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 4 வார காலத்திற்குள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

VAO appointed dhamapuri collector chennai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe