Skip to main content

“பணத்தைக் கொடுத்தால் சான்றிதழ்”; கறாராகப் பேசிய விஏஓ - காப்பு போட்ட போலீஸ்!

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

VAO arrested for taking 1000 rupees bribe

 

விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது அன்னம்மாள். இவரது கணவர் அருளானந்த்தின் தந்தை மாணிக்கம் மற்றும் அருளானந்த்தின் அண்ணன் சவரிமுத்து. இவர்கள் இருவரும் 25 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். அப்போது இருவரின் இறப்பையும் விபரம் தெரியாமல் வருவாய்த் துறையில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார் அன்னம்மாள்.

 

தற்போது சொத்து தொடர்பாக மூவரின் இறப்புச் சான்று தேவைப்படுவதால், அன்னம்மாள் அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை அணுகியுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, மாணிக்கம், சவரிமுத்து ஆகியோரின் இறப்பு விபரத்தை இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வொரு மனுவுக்கும் 500 ரூபாய் என மொத்தம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அன்னம்மாளிடம் பேரம் பேசியுள்ளார்.

 

இதைக் கேட்ட அன்னம்மாள், “நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இருக்கும் கொஞ்சம் சொத்தை விற்று என் இறுதிக் காலத்தை நடத்துவதற்கு அந்த இறப்புச் சான்றுகள் தேவை. அதனால் அவை கிடைக்க உதவி செய்யுங்கள்” என்று பணிந்து கேட்டுள்ளார். அதற்குக் கிராம நிர்வாக அதிகாரி சங்கீதா, “பணம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கும், எப்படியாவது பணத்தைத் தயார் செய்து எனது அலுவலகத்தில் வந்து என்னிடம் கொடுங்கள்” என்று கறாராகக் கூறியுள்ளார். 

 

இதனால் வேதனை அடைந்த அன்னம்மாள், இது குறித்து விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை அன்னம்மாளிடம் கொடுத்து, அதைச் சங்கீதாவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். போலீசாரின் அறிவுரையின்படி நேற்று காலை அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு அன்னம்மாள் அரியலூர் திருக்கை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்தார். பணத்தைச் சங்கீதா வாங்கும் போது அங்கு ஏற்கனவே தயாராக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி பாலசுதாகர், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் சுற்றி வளைத்துச் சங்கீதாவைக் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

கையும் களவுமாக பிடிபட்ட முன்னாள் ஆணையர்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Ex-Corporation Commissioner sentenced to three years imprisonment in bribery case

வேலூர் மாநகராட்சி ஆணையராக ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார். இவர் சிலமாதங்களுக்கு முன்பு ஆணையர் குமார் தூத்துக்குடியில் துணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் சமயத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு குமார் வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்காக மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியையும் ஒப்பந்தம் எடுத்து செய்துள்ளார்.

இதற்காக ரூ. 10 லட்சத்து 23 ஆயிரம் காசோலையை மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது எனக்கு 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரம் தர வேண்டும் என்று ஆணையர் குமார் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஒப்பந்ததாரரை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தியதோடு பில் கிளியர் செய்வதை தாமதம் செய்துள்ளார். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான பாலாஜி ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார் என பாலாஜி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலாஜியிடம் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கொடுத்து கமிஷனர் குமாரிடம் வழங்கும்படி தந்தனர். ஒப்பந்ததாரர் பாலாஜி ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 29.04.2024 ஆம் தேதி இவ்வழக்கில் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.