Skip to main content

லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கும் மின்வாரிய ஊழியருக்கும் 4 ஆண்டு சிறை

Published on 01/07/2020 | Edited on 01/07/2020
22

 

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வளத்தியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ஈசூர் மின்வாரிய அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு விவசாயி ஒருவர் வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். அந்த விவசாயிடம் இளங்கோவன் 3,000 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த லஞ்சப் பணத்தை இளங்கோவன் விவசாயிடமிருந்து பெற்றபோது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இளங்கோவனை பிடித்து கைது செய்தனர்.

 

இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் இளங்கோவனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பளித்துள்ளார்.

 

அதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள திருக்க னங்கூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் மணிவண்ணன். இவர் அப்பகுதியில் விவசாயி ஒருவர் வங்கியில் கடன் பெறுவதற்க்காக சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவரிடம் 2,000 லஞ்சம் கேட்டுள்ளார் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன். அந்த விவசாயி மணிவண்ணனிடம் லஞ்சப் பணம் கொடுக்கும்போது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரல் கைது செய்யப்பட்டு மணிவண்ணன் சிறையிலடைக்கப்பட்டார்.

 

இந்த வழக்கு விசாரணையும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் அனைத்து சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கிலும் நீதிபதி மோகன் தீர்ப்பு வழங்கினார். அதில் மணிவண்ணனுக்கு நான்கு ஆண்டு சிறைதண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இப்படி சாதாரண மக்களோடு நெருக்கமாக இருக்கும் கீழ்நிலை அதிகாரிகள் மனசாட்சி இல்லாமல் லஞ்சம் கேட்டு அதில் பலர் லஞ்ச வழக்கில் சிக்கிக் கொண்டு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று சிறைக்கு செல்கிறார்கள் இது அவ்வப்போது நடந்து வருகிறது இருந்தும் கிராம அளவில் உள்ள அதிகாரிகள் முதல் பெரிய அதிகாரி அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவது மட்டும் குறையவே இல்லை ஒரு தாலுக்கா அலுவலகத்தில் மனு கொடுத்து அந்த மனுவில் மீதுசீல்போடும் கடைநிலை ஊழியர் மக்களிடம் கை நீட்டுவது வரை  குறையவே இல்லை "திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது "என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருடர்களும்திருந்த மாட்டார்கள் சட்டத்தாலும்திருத்த முடியாது  என்ற நிலையை இன்று வரை  உள்ளது இந்த நிலை எப்போது மாறும்?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.