Skip to main content

வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு பணி வழங்க வேண்டும்... பாதிக்கப்பட்ட பழக்கடை பெண் மனு!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
Vaniyambadi municipal commissioner to serve ... Victim old woman petition!

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் உள்ள சி.எல் சாலையில் மே 12ந்தேதி, ஆய்வுக்கு சென்ற நகராட்சி ஆணையர் சிசில்தாமஸ், அந்த சாலையில் இருந்த பழங்களை எடுத்து சாலையில் வீசினார், அதேபோல் பழக்கடை தட்டுகளை கீழே கொட்டினார், பழவண்டியை அப்படியே சாய்த்து சாலைகளில் கொட்டினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.


இதனை கண்டு தமிழகமே அதிர்ச்சியானது. அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களான கனிமொழி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் தமிழக அரசு அந்த ஆணையர்  மீது ஒழுங்கு நடைவடிக்கை எடுத்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்து, வாணியம்பாடிக்கு புதிய ஆணையராக பாபு என்பவரை நியமித்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வாணியம்பாடி 18 தொழில் சங்கங்களின் பேரமைப்பினர் சார்பில் சிசில் தாமஸை மீண்டும் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணி வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளை சந்தித்து மே 14ந்தேதி கோரிக்கை மனு அளித்தனர். அதனையும் மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டுள்ளார்.

 

 


அப்போது பாதிக்கப்பட்ட பழக்கடை பெண்கள் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதிகளில் தற்போதுவரை 5 நபர்கள் மட்டுமே கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் தீவிர விடாமுயற்சி பணியால் மட்டுமே இது சாத்தியமானது. மேலும் நகராட்சி ஆணையரின் செயல்பாட்டில் எங்களுக்கு சிறுதளவும் வருத்தம் இல்லை, அவர் செய்தது பொதுமக்களின் நலனுக்காகவே. ஆகவே தமிழக அரசு வாணியம்பாடி நகராட்சி ஆணையாராக மீண்டும் சிசில் தாமஸை பணியில் அமர்த்த வேண்டும் பாதிக்கப்பட்ட பழக்கடை பெண்களை பேட்டி அளிக்க வைத்தனர்.

 


இந்தசெயல் சமூக ஆர்வலர்களை இன்னும் கொதிப்படைய செய்துள்ளது. அவர் செய்த செயல் என்பது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது. சாதாரண ஏழை தொழிலாளர்களிடம் இப்படி நடந்துகொண்டவர், பல நிறுவனங்கள் அப்படி திறந்து நடத்துகிறது, அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அவர் செய்தது சரிதான் என பாதிக்கப்பட்ட பெண்களையே பேசவைத்திருப்பது வேதனைக்குரியது. பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னிச்சையாக வந்து மனு அளித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அப்படி மனு தந்ததாக தெரியவில்லை. நெருக்கடியால் வந்து தந்தது போல்தான் தெரிகிறது என்கிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.

Next Story

ஆய்வில் விசித்திரம் காட்டிய மாவட்ட ஆட்சியர் !

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The collector Research pretending to be a patient in uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலம், பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள், வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்த தொடர் புகாரின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ், அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆட்சியர் கிருதி ராஜ் தலையில் முக்காடு அணிந்து ஒரு நோயாளி போல் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த மருத்துவர், ஆட்சியர் கிருதி ராஜிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்சியர் கிருதி ராஜ், தான் யார் என்பதை தெரிவித்த பிறகு, அந்த மருத்துவமனையே ஆட்டம் கண்டுள்ளது. 

அதன் பின்னர், ஆட்சியர் கிருதி ராஜ் அந்த மருத்துவமனை முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வில், மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது என பல குற்றங்கள் கண்டறியப்பட்டது. 

இது குறித்து ஆட்சியர் கிருதி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு  நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்குப் பிறகும் மருத்துவர் வரவில்லை என சுகாதார நிலையம் தொடர்பாக எனக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், நான் மறைந்திருந்து, முக்காடு போட்டுக் கொண்டு அங்கு சென்றேன். அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது.

வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இருந்தாலும், சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை எனவும் தெரிந்தது. கையிருப்பில் உள்ள பெரும்பாலான மருந்துகள் காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் தூய்மையும் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று கூறினார்.