'Vandebharat' train departed from Chennai to Mysore!

சென்னை மற்றும் மைசூரு இடையே இயக்கப்படவுள்ள 'வந்தேபாரத்' ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

Advertisment

நாட்டின் ஐந்தாவது 'வந்தேபாரத்' ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, வருகிற நவம்பர் 11- ஆம் தேதி அன்று தொடங்கி வைக்கிறார். சென்னை ஐசிஎஃப்- ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், கடந்த வாரம் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பயணம் செய்வதற்கு முன்பு ரயிலை சோதிக்கும் விதமாக சென்னையில் இருந்து மைசூருக்கும், மைசூரிலிருந்து சென்னைக்கும் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

Advertisment

இன்று காலை 05.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டஇந்த ரயில் மைசூருக்கு பிற்பகல் 12.30 மணிக்கு சென்றடையும். பின்னர், மைசூருவில் இருந்து மதியம் 01.05 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 07.45 மணிக்கு சென்னை வந்தடைகிறது. 504 கிலோ மீட்டர் தொலைவை ஆறு மணி 40 நிமிடம் நேரத்தில் கடக்கிறது.