சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று (06/06/2021) நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய சிங்கங்களைப் பார்வையிட்டு, அச்சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின் போது, தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எம்.வரலட்சுமி மதுசூதனன ஆகியோர் உடனிருந்தனர்.