Advertisment

தொழிலாளர்களை ஏற்றிவந்த வேன் விபத்து - சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலி 

ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெண் தொழிலாளர்களை ஏற்றிவந்த வேன் எதிரே வந்த லாரியுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியானார்கள்.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 25க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சோலூர் என்ற இடத்திற்கு அருகே வந்தபோது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் எதிர்பாராத விதமாக வேன் மோதியது. இதையடுத்து, வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் எதிரே வந்த லாரியின் மீது மோதியது. இதில், வேனின் ஓட்டுநர் உட்பட வாகனத்தில் பயணித்த மூன்று பணியாளர்கள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த சக பெண் தொழிலாளர்கள் தற்போது ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

ambur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe