Skip to main content

பூசாரி கொலை வழக்கில் மனைவி, மகள், மகள் காதலன் கைது... 

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
Valavanur  Viluppuram

 

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள வடவாம்பலம் இந்த ஊரைச் சேர்ந்த பூசாரி தனசேகரன். இவர் தனது வீட்டில் இரவில் தூங்கும் போது 12ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

 

இந்த விசாரணையில் பூசாரி தனசேகரன் மனைவி ராஜேஸ்வரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் எனது மூத்த மகள் சத்யாவுக்கும் சின்னநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து வைத்தோம். திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் குமாரின் உறவினர் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் அடிக்கடி மகள் சத்யா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது என் மகளுக்கும் முருகவேலுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை குமார்  கண்டித்துள்ளார்.

 

இது தெரிந்ததும் கணவன் மனைவி இடையே மேலும் பிரச்சினை அதிகரித்தது. இந்த நிலையில் எனது மகள் கர்ப்பமடைந்தார். பிரசவத்திற்காக எனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தோம். அவருக்கு ஆறு மாதம் முன்பு பெண் குழந்தை பிறந்த நிலையில் ஆறு மாதம் கழித்து குமார் வந்து சத்யாவை தங்கள்  வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்தார். குமார் எனது மகளை சரியாக பார்த்துக் கொள்ளிததால் நான் அனுப்பி வைக்கவில்லை. இந்த நிலையில் முருகவேல் குழந்தை பிறந்த பிறகும் எனது மகளை எங்கள் வீட்டிற்கு  வந்து சந்தித்து இருந்து விட்டுப் போவார். அப்போதுதான் எனது கணவருக்கு மகள் சத்யாவிற்கும் முருக வேலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

 

அதனால் முருகவேல் இனிமேல் நமது மகளை சந்திக்க கூடாது என்று சத்தம் போட்டார். இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து என்னிடமும் மகளிடமும் பிரச்சனை செய்து வந்தார். பொறுத்து பார்த்தோம் என் கணவர் சத்யாவின் கள்ளக்காதலன் முருகவேலை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தொடர்ந்து பிரச்சினை செய்ததால் என் கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

 

மேலும் இதற்கு உடந்தையாக முருகவேல் இருந்தார். சம்பவத்தன்று குடிபோதையில் எனது கணவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நானும் எனது மகளும் சேர்ந்து கத்தி அரிவாள் மணையால் தலை உடல் பகுதியை வெட்டி படுகொலை செய்த பின்னர் ஒன்றும் தெரியாதது போல் ரத்தக்கறையான ஆடைகளை மறைத்து வைத்து விட்டோம். நள்ளிரவானதும் ரத்த வெள்ளத்தில் எனது கணவர் இறந்து கிடக்கும் தகவலை அப்போது தான் பார்த்தது போல் கத்தி சத்தம் போட்டோம் ஊர்மக்கள் ஓடி வந்தனர். கொலையை மறைக்க நாடகமாடினோம். போலீசார் எங்களை கண்டுபிடித்துவிட்டனர். இவ்வாறு தனசேகரன் மனைவி ராஜேஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இதையடுத்து ராஜேஸ்வரி அவரது மகள் சத்யா, கொலைக்கு உடந்தையாக இருந்த சத்யாவின் கள்ளக்காதலன் முருகவேல் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.