Skip to main content

பொறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் ஒதுக்கியதால் காவல்நிலையத்திலேயே வளைகாப்பு... நெகிழ்ந்த பொதுமக்கள் 

Published on 30/04/2019 | Edited on 30/04/2019




 

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் குடும்ப சூழலால் வளைகாப்பு செய்ய முடியாமல் இருந்த பெண் காவலருக்கு, காவல்நிலையத்தில் பணியாற்றும் சக போலீஸ்காரர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். 
 

செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலையத்தில் இலக்கியா என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராசு தனியார் அரசி ஆலையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முட்டியாம்பூண்டி கிராமத்தை இலக்கியா, அதே பகுதியைச் சேர்ந்த ராசுவை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். 
 

இலக்கியா ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை இருந்தது. இதனை சக காவலர்கள் மூலமாக அறிந்த காவல் ஆய்வாளர் இளங்கோவன், மற்ற காவலர்களுடன் ஆலோசனை செய்து இலக்கியாவுக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து ஆளுக்கொரு செலவை ஏற்றுக்கொண்டு தங்களது சொந்த சகோதரிக்கு செய்தது போல வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். 

 

இலக்கியா - ராசு திருமணம் இருவீட்டாருக்கும் பிடிக்கவில்லை என்பதால் கடந்த ஒரு வருடமாக இருவீட்டாரும் இவர்களிடம் பேசவில்லை. நிறைமாத கர்ப்பிணியான இலக்கியா தனது நிலை குறித்து சக பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த போலீசார் மற்றும் காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் தங்களால் இயன்ற சிறு தொகையை போட்டு இலக்கியாவுக்கு பட்டுப்புடவை எடுத்த 9 வகையான சாப்பாடு போட்டு ஆரத்தி எடுத்து வளைகாப்பு நடத்தியதாக சொல்கின்றனர் காவல்நிலைய காவலர்கள். 
 

சக காவலர்கள் எடுத்த இந்த வளைகாப்பு விழா இலக்கியாவை மட்டுமன்றி அந்தப் பகுதி பொதுமக்களையும் நெகிழ வைத்தது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

குடிநீர் ட்ரம்மில் மிதந்த எலி; ஹோட்டலில் சாப்பிட சென்றவர்கள் அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
A rat floated in a drinking water drum; Those who went to eat at the hotel were shocked

உணவகங்களில் சுகாதாரத் தூய்மைகளை கடைபிடிக்காததால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுவது வாடிக்கையாகி வருகிறது. சிறு உணவகங்கள் முதல் பெரிய உணவகங்களில் கூட உணவு பொருட்களை அலட்சியமாக கையாளுதல், உணவு பொருட்களின் தரம் மற்றும் கடைகளில் சுகாதாரம் இன்மை குறித்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் சிறிய உணவகம் ஒன்றில் குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பேர்லரில் எலி செத்து மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 'சாஜ் டீ ஸ்டால்' என்ற சிறிய உணவகம் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு சிலர் உணவு சாப்பிட சென்ற நிலையில் தண்ணீர் வைக்காததால் பேரலிலிருந்து தண்ணீரை எடுத்து குடிக்கும்படி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து தண்ணீர் நிரப்பி வைத்திருந்த டிரம்மை பார்த்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செல்போனில் அதை படம் பிடித்த வாடிக்கையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 'லட்சுமிபுரம் சாஜ் ஹோட்டலில் எலி செத்து மிதந்த தண்ணீரை நாங்கள் குடித்திருக்கிறோம். ஒரு வாரமாக செத்து கிடந்து இருக்கிறது போல. பசிக்கு நாங்கள் சாப்பிட வந்த இடத்தில் குடிநீர் ட்ரம்மில் எலி கிடந்ததை கூட பார்க்காமல் உள்ளனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். உணவுத்துறை அதிகாரிகள் இதுபோன்ற ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.