பா.ஜ.க. முன்னாள் பிரதமரான அடல்பிகாரி வாஜ்பாய்க்கு வரும் 25ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக இன்று (23.12.20 புதன்) காலை 10.30 மணியளவில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி நடுக்குப்பம் மீன் மார்க்கெட் அருகில் பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் மீன் விற்கும் மகளிருக்கு ‘அலுமினியம் மீன் கூடை வழங்கும் விழா’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற பொறுப்பாளர் குஷ்பு சுந்தர் மற்றும் மாநில மீனவர் அணி தலைவர் சதீஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு, மீனவர்களுக்கு ‘அலுமினியம் மீன் கூடை’ வழங்கினார். மேலும் அங்குக் கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.