“அமைச்சர்கள் இதுபோன்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்துங்களப்பா...” - வைரமுத்து

Vairamuthu advises to ministers

வெளிநாடு செல்லும் அமைச்சர்கள் இது போன்ற உருப்படியான திட்டங்கள் செயல்படுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘துபாயில் இருக்கிறேன்.. எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல. பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய

குப்பைமேடு.

இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு. வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா...’ எனத் தெரிவித்துள்ளார்.

ministers Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe