குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடெங்கிலும் போராட்டங்களும், கலவரங்களும் வலுத்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
’’எதிராக வாக்களித்தவர்க்கும்
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.’’