Skip to main content

வைகுண்ட ஏகாதசி விழா- பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

vaikunta ekadasi festivals temples peoples

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

 

உலக புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று (25/12/2020) அதிகாலை 04.45 மணிக்கு சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறக்கப்பட்டது. 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை. காலை 08.00 மணிக்கு மேல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருப்பதி உள்பட பல கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 

 

கரோனா கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து பக்தர்களும் தரிசிக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்முறையாக ஜனவரி 3- ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

“கோயிலில் இருக்கேன்” - அரசியல் கேள்வியை தவிர்த்த ஜெயம் ரவி

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
jayam ravi omitted vijay political entry question

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். 

இதில் சைரன் படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்க ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இந்த நிலையில் ஜெயம் ரவி தனது மனைவியுடன் திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது அடுத்தடுத்த படங்களைப் பற்றி சொன்னார். மேலும் மணிரத்னம் - கமலின் தக் லைஃப் படம் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார் பின்பு அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெயம் ரவி, “கோயிலில் இருக்கேன். என் படத்தை பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்” எனச் சொல்லிவிட்டு சென்றார்.