Skip to main content

மதிமுக கட்சியின் வெள்ளிவிழாவிற்கு ஈரோட்டில் இடம் தேர்வு - நேரில் சென்றார் வைகோ

Published on 07/06/2018 | Edited on 07/06/2018

 

ம.தி.மு.க. தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி கட்சியின் வெள்ளி விழா மாநாடு நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த மாநாடு ஈரோட்டில் நடத்த திட்ட மிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. கட்சியின் மாநில பொருளார் அ.கணேசமூர்த்தி ஈரோடு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்ய அதை பார்வையிடுவதற்காக வைகோ இன்று மாலை நேரில் வந்தார்.சித்தோடு, மேட்டுக் கடை , மற்றும் நசியனூர் பகுதிகளில் பார்வையிட்ட அவர் மேட்டுக் கடை to பெருந்துறை செல்லும் விவசாய தோட்ட இடத்தை தேர்வு செய்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 25 தேதி இந்த வெள்ளி விழா மாநாடு இங்கு ஈரோட்டில் நடக்க உள்ளது. ஏற்கனவே தி.மு.க. மண்டல மாநாட்டை ஈரோட்டில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்