Skip to main content

திமுக - மதிமுக தொகுப்பங்கீட்டில் தாமதம் ஏன்? வைகோ விளக்கம்

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இணைந்தது.  இதற்கான ஒப்பந்தம் இன்று முடிவானது.   சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணி ஒப்பந்தம் முடிவானது.  நாளை தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு  ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று தகவல்.

 

a

 

இது குறித்து அண்ணா அறிவாலயத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  ‘’ திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.   அண்ணா அறிவாலயத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணிக்கு திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். மதிமுக பேச்சுவார்த்தைக்குழுவில் உள்ள உறுப்பினர் தொலைவில் இருப்பதால் அவரால் வர இயலவில்லை. ஆதலால் நாளை மறுபடியும் பேச்சுவார்த்தை நடைபெறும்.   நாளை மாலைக்குள் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிப்பங்கீடு உடன்படிக்கை ஏற்பட்டுவிடும்’’ என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்