Skip to main content

வைகோ இனம் பார்த்து பழக வேண்டும் களம் பார்த்து கால் வைக்க வேண்டும் - ம.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. துரைமுருகன்!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
duraimurrugan

 

ம.தி.மு.க.வின்  முப்பெரும் விழா மாநில மாநாடு இன்று ஈரோட்டில் நடந்தது. இம் மாநாட்டில் தி.மு.க. பொருளா ளர் துரைமுருகன்  திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்து பேசினார்.  .தி.மு.க.வின்  தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரதிநிதியாக இந்த மாநாட்டிற்கு நான்  வந்துள்ளேன். இதில்  கலைஞரின் படத்தை திறந்து வைத்ததில் நான் பெருமை படுகிறேன் .அதை போலவே எனது  50 ஆண்டுகால நண்பர் வை.கோ.வின் வாழ்வை வாழ்த்துவதிலும் எனக்கு  மகிழ்ச்சி. நாங்கள் இருவருமே கலைஞரால் உருவாக்கப்பட்டவர்கள். நாங்கள் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் கலைஞரின் சக்தி எங்களை வழிநடத்தும். 

 

 

கலைஞர் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் அதனால் இந்த சமூகம் அடைந்த பயன்கள் எல்லாம் தலைவர் வாழ்ந்தபோது பாராட்டதவர்கள் தற்போது பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. வேறுபட்ட கொள்கைகளை, கருத்துக்களை கொண்ட தலைவர்கள் கூட தற்போது கலைஞரின் புகழை பாடுவது அவர் ஆற்றிய பணிகளுக்கான அங்கீகாரம் ஆகும்.

 

நானும் வை.கோவும் ஒன்றாக சட்டக் கல்லூரியில் படித்த்தவர்கள். அன்று தொடங்கிய எங்கள் நட்பு இன்றைக்கும் தொடர்கின்றது. எங்கள் இருவருக்கும் எப்போதுமே ஊடல்கள் இருந்தது இல்லை. அரசியலில் மாறுபட்டு பிரிந்து இருந்த போது நான் வைகோவை பற்றி வெளுத்து வாங்கி இருக்கிறேன். ஆனால் என்றைக்கும் என்னைப்பற்றி ஒரு நாளும் வைகோ தவறாக பேசியது இல்லை.. தன் உயிரை விட கலைஞரை அதிகம் நேசித்தவர் வைகோ. பாராளுமன்றத்தில் என் நண்பன் வைகோ பேசியது போல எந்த தமிழனும் பேசியது இல்லை. பாராளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தீடீரென்று எழுந்து செல்ல முயன்றார். அப்போது வைகோ  ஓடாதே நில் என்று தைரியமாக கேள்வி கேட்ட ஒரே தமிழன் வைகோ ஒருவர்தான். இந்த 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். ஆம் ஐம்பது ஆண்டுகாலம் எரிமலை மீது அவர் நடந்து வந்ததுதான் அதிகம். இனி அவர் அடுத்து வருகிற அரை நூற்றாண்டில் இனம் பார்த்து பழக வேண்டும். களம் பார்த்து கால் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரின்  ஆற்றல், அறிவு, தைரியம் தற்போது தமிழகத்திற்கு தேவையாக உள்ளது. வைகோவின் தியாகம் வீண் போகாது.  விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பார்க்க வவுனியா சென்றபோது வைகோ பத்திரமாக திரும்பி வந்துவிடுவாரா என்று கேட்டு கலைஞர் முதன் முறையாக கண் கலங்கினார். அதைதொடர்ந்து  திண்டுக்கல் நடந்த மாநாட்டின் போது என்னை வைகோ இழந்தாரா அல்லது வைகோவை நான் இழந்தோனா என்று கூறி இரண்டாவது முறையாக கலைஞர் கண் கலங்கினார். 

 

அரசியலில் பிரிவுகள் வரலாம். ஆனால் கொள்கையில் என்றைக்கும் பிரிவு வரக்கூடாது. திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்ற போதும் திராவிட இயக்க கொள்கையிலிருந்து வைகோ மாறவில்லை. அரசியலில் எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் தியாகம் செய்தவர் வை.கோ." என்ற துரைமுருகன், 

"அதேபோல் வை.கோவுக்கு மட்டும் அரசியலில் பொன்விழா அல்ல நானும் 1954 லிலேயே அரசியலுக்கு வந்தவன் தான் எனக்கும் அரசியலில் பொன் விழா தான்." என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.