ADVERTISEMENT

''முத்திரை பதிக்கும் சித்திரை'' - வைகோ வாழ்த்து  

11:12 AM Apr 13, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சித்திரை முதல் நாளான நாளை (14.04.2021) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், 'தமிழர் வாழ்வில் முத்திரை பதிக்கும் சித்திரை மலர்கிறது. மலரும் சித்திரையில் தளரும் பகை, வளரும் நகை. மகிழ்வோடு இந்த நாளை கொண்டாடுவோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ''தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ் பெருமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழ் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும்'' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT