Skip to main content

வைகோ கையில் தானாக ஒளிரும் குழல்விளக்கு... என் கையிலுள்ள இந்த குழல் விளக்கு எரிகிறது, என் உடலில் மின்சாரம் பாய்கிறது.... -வைகோ

Published on 13/02/2019 | Edited on 13/02/2019


 

vaiko

 

நேற்று இரவு, ஈரோடு மாவட்டம், ஓடாநிலை எனும் இடத்தில் உயர் மின் கோபுர கம்பிகளுக்கு கீழே மதிமுக தலைவர் வைகோ கையில் வெறும் குழல் விளக்கு பிடித்தபோது எந்த விதமான இணைப்பும் இன்றி அது எரிந்தது. இதுகுறித்து அவர் கூறியது,

 

230 கிலோ வாட் மின்சாரம் கொண்டுசெல்லப்படும் மின்கம்பிகளுக்கு கீழே நான் நிற்கிறேன். என் கையிலுள்ள இந்த குழல் விளக்கு எரிகிறது, என் உடலில் மின்சாரம் பாய்கிறது. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இதுவே 400 கிலோவாட் போடும்பொழுது, 800 கிலோவாட் அளவிற்கு போடப்படும்பொழுது அந்த பகுதியில் எந்த அளவிற்கு மின்சாரம் பாயும். அது எந்த அளவிற்கு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும், விவசாயத்தை அழிக்கும். அதுமட்டுமல்ல நான்கு இடங்களிலே பெரிய கிணறு போன்ற குழிகளை வெட்டி அதிலே இந்த மின் கோபுரங்களை அமைக்கிறார்கள். இதில் ஒரு ஏக்கர், ஒன்றரை ஏக்கர் பாழாகி அந்த குடும்பமே அழிந்து போகிறது. 

 

vaiko


 

இதை எதற்காக காட்டுகிறேனென்றால், 230 கிலோவாட் பாயும் கம்பி தடத்திற்கு கீழே நின்றாலே இவ்வளவு பாய்கிறதே இதுவே 400 கிலோவாட், 800 கிலோவாட் பாயும்பொழுது எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை முதலில் அரசு உணரவேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என்பது எங்களது உயிர்கொள்கை. மின்சாரத்திற்கு எதிரியல்ல நாங்கள். அதனால்தான் நாங்கள் கேபிள் வழியாக கொண்டுசெல்ல வேண்டும் எனக் கோருகிறோம்.

 

உலகநாடுகளுக்கெல்லாம் கொண்டுபோக போகிறோம், 3100 கிலோமீட்டருக்கு அப்பால், இங்கிருந்து 1100 கிலோவாட் மின்சாரத்தை பூமிக்கடியிலே, கடலுக்கடியிலே கொண்டுசெல்லப்போகிறேன் எனக்கூறும் பிரதமர் நரேந்திரமோடி இங்கே இந்த பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகளைப்பற்றி எண்ணியிருப்பாரா? இந்த தமிழ்நாடு அரசு முதுகெலும்பற்ற அரசு எதிர்காலத்தில் இந்த விவசாயிகளுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை பற்றி கொஞ்சமாவது சிந்தித்திருக்குமா? இந்த கவலையினால்தான், நம் சந்ததிகளைக் காப்பாற்றும் விவசாயிகளை காப்பாற்ற மட்டுமல்ல, உடல்நலத்தையும் பாதுகாக்க, அந்த பகுதியில் விவசாயம் செய்யமுடியாது. பின் எப்படி விவசாயம் செய்யமுடியும். இந்த உண்மைகளை உணர்த்துவதற்காகத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.