Advertisment
2016ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அனைத்து கட்சியினரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக இன்று (22.09.2021) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் எம்.பி., எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர்.