Skip to main content

ஏய் கரோனா என் மக்களையே டர்ர்ர்... ஆக்குகிறாயா??? நாரதர் வேடத்தில் வடிவேலு... 

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

மதுரை என்றாலே போஸ்டருக்கு பஞ்சமில்லை. உயிர் கொல்லியின் உயிர் கொல்வோம் தலைவரின் ஆணையை ஏற்று என்று மோடி படத்துடன் ஜெயலலிதா படம்,எடப்பாடி-ஓபிஎஸ் படத்தோடு செல்லூர் ராஜு ஆதரவாளர் சோலைராஜா கிரம்பர் சுரேஷ் ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "தமிழா தனித்திரு தனிமையே தேசத்தின் ஒற்றுமை" என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

 madurai posters


 

இன்னொரு போஸ்டரில், ஏய் கரோனா என் மக்களையே டர்ர்ர்... ஆக்குகிறாயா??? என ஒட்டப்பட்டுள்ளது. அதில், முருகனும் நாரதரும் பேசிக்கொள்வது போல் உள்ளது. வேலோடு விளையாடியே போர் அடித்து விட்டது, நான் விளையாட வேறு ஏதேனும் புதிதாய் கொண்டு வாருங்களேன் என நாரதரைப் பார்த்து முருகன் கேட்கிறார்.


 

அதற்கு நாரதர், முருகா... பூமியில் கரோனா வைரஸ் எனும் கிருமி மனிதர்களை அச்சுறுத்தி கொண்டு இருந்தது, அதனையே பிடித்து வந்துள்ளேன். அதனிடம் காட்டு உனது திருவிளையாடலை... நாகரிகத்தையும், பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உலகின் எட்டுத்திக்கிற்கும் கற்பித்த தமிழ் சமூகமே, அதனையே பின்பற்று எதற்கும் அஞ்சாதே, நான் இருக்கிறேன் உன்னோடு.. யாமிருக்க பயமேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாரதர் வேடத்தில் வடிவேலுவைப் போஸ்டரில் அச்சடித்துள்ளனர். இந்தப் போஸ்டரும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

 madurai posters


 

மதுரையில் சினிமா, அரசியல் சம்மந்தமாக விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதே நேரத்தில் போஸ்டர் பிரியர்கள் கரோனாவையும் விட்டுவைக்கவில்லை.கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்கய்யா ...!

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.