Skip to main content

என்னடா குறுகுறுன்னு பார்க்கிறே..? வடிவேலு பட பாணியில் மூக்குடைக்கப்பட்ட சகோதரர்கள்!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

 

திருமண மண்டப பந்தியில் சாப்பிடும் போது "தங்களை குறுகுறுன்னு பார்த்ததாக" இருவரை தாக்கி மூக்குடைத்து அனுப்பியுள்ளனர் மூவர். நடிகர் வடிவேலு படத்தில் வரும் காட்சி போல் நடந்த இச்சம்பவத்தால் மண்டபமே பரப்பரப்புக்குள்ளானது.

 

vadivelu film

 

dsr222


 
சிவகங்கை மாவட்டம் ஆறாவயல் காவல்சரகம் ஊரிவயலை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரனும், சுதாகரும். இதே ஊரினை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், ராமன் மற்றும் பிச்சை ஆகியோர். பெண்ணை கேலி செய்த வழக்கில் இருதரப்பிற்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3ந் தேதி அன்று சாக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட உமையாம்பிகை கோவில் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற திருமணத்திற்கு ராமச்சந்திரனும், சுதாகரும் வந்திருக்கின்றனர். அதுபோல் செந்தில்குமார் தரப்பும் அங்கு வந்துள்ளது. 


 

 

நடிகர் வடிவேலு நகைச்சுவை போல், பந்தி நடைபெறும் வேளையில் சுதாகரும், ராமச்சந்திரனும் தங்களை "குறுகுறுன்னு பார்த்ததாக" தாக்க தொடங்கியிருக்கின்றது செந்தில்குமார் தரப்பு. இதில் சுதாகருக்கும், ராமச்சந்திரனுக்கும் மூக்குடைந்துள்ளது. மண்டபத்தில் நடந்த கைகலப்பால் மண்டபமே அல்லோகலபட, மூக்குடைப்பட்டவர்களில் ஒருவரான சுதாகர் சிவகங்கையிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமச்சந்திரன் சாக்கோட்டை காவல்நிலையத்தில் புகாரினை அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து கடந்த 5ம் தேதியன்று செந்தில்குமார் தரப்பு மேல் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.