Advertisment

வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பணியிடை நீக்கம்

Vadapathimangalam Assistant Electrical Engineer Post Removal

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. சாத்தனூர், சித்தாம்பூர், வேல்குடி, பழையனூர் ஆகிய கிராமங்களுக்கு வடபாதிமங்கலத்தில் மின் பொறியாளர் அலுவலகம் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் கடந்த ஆறாவது மாதம் (ஜூன்) செலுத்திய மின் கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என தினசரி நாளிதழில் வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

Advertisment

வடபாதிமங்கலம் மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் சார்பில் நாளிதழில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கணக்கீடு பணி செய்ய போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் (2023) 8 வது மாத கணக்கீட்டிற்கு 6 வது மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே செலுத்திடுமாறு பழையனூர், கானூர், சாத்தனூர், சித்தாம்பூர், வெள்ளக்குடி, வேளுக்குடி ஆகிய பகுதி மின் நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடம் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மின்சார வாரியம் சார்பில் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பிரேம் ராஜ் பணியிடைநீக்கம் செய்து மின்வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

TANGEDCO Thiruvarur tneb
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe