Skip to main content

தடுப்பூசி தட்டுப்பாடு... அலைக்கழிக்கப்படும் மக்கள்!! 

Published on 18/06/2021 | Edited on 18/06/2021
Vaccine shortage ... disturbed people

 

கரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்ததும் மத்திய, மாநில அரசுகள், சுகாதாரத்துறையினர், பல்வேறு மருத்துவர்கள் நோய்ப் பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை அறிவுறுத்தல்களை கூறிவந்தனர். ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டிய மக்கள் தற்போது உயிர் பயத்திலும் தடுப்பூசி மருந்து தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையினாலும் கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமுடன் செல்கின்றனர்.

 

கடந்த காலங்களில் சினிமா தியேட்டர்கள் டிக்கெட் வாங்கவும், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கவும் காத்திருந்த காலம் கட்ந்து தற்போது தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி மக்களை காலம் காலமாக நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்தே காலம் கழிகிறது மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள். தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளது, அதே நேரத்தில் அரியலூர் மாவட்டத்தில் எந்தந்த முகாம்களில் எந்தெந்த தேதிகளில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். முறையாக சரியாக அந்த மையங்களில்  மக்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி அந்தந்த பகுதி மக்கள் சென்று தடுப்பூசிகளை சுலபமாக செலுத்திக் கொள்கிறார்கள்.

 

ஆனால் கடலூர் மாவட்டத்தில் (வாம்மா மின்னல் என்பது போல) அதோ தடுப்பூசி வந்து உள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன் மக்கள் அரக்கபரக்க சுகாதார நிலையங்களுக்கு ஓடு கிறார்கள். அதற்குள் தடுப்பூசி தீர்ந்துவிட்டது என்று பதில் அளிக்கின்றனர் ஊழியர்கள். எனவே கடலூர் மாவட்ட ஆட்சியரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுகாதார மையங்களில் அல்லது சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் எந்தெந்த தேதிகளில் எந்த காலம் வரையில் தடுப்பூசிகள் போடப்படும் என்று சமூக வலைதளங்களிலும் தினசரி பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம்  மக்கள் அலைக்கழிக்க அட வேண்டியதில்லை  நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதே போல் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு  டோக்கன் முறை  கொண்டு வந்தால்  அவர்கள்  அதன்படி  முறையாக சென்று  தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.

 

இதனால் கால விரயம்  ஆகாது தற்போது ஒவ்வொரு சுகாதார நிலையங்களையும் தடுப்பூசி இங்கு போடப்படுமா, அங்கு போடப்படுமா என்று தேடித் தேடி அலையும் அவலம் நடைபெறுகிறது. அதற்கு உதாரணம் மங்களூர், நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி கேட்டு மக்கள் அலை மோதுகிறார்கள். நீண்ட  வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தும் ஊசி போடும் இடத்திற்கு அருகே சென்றதும், தடுப்பூசி தீர்ந்துவிட்டது என அறிவிக்கிறார். மீண்டும் எப்போது வரும் என்பதை  அங்கிருக்கும் மருத்துவர்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. இதனால் கால்கடுக்க காத்திருந்தும் தடுப்பூசி போட முடியாததால் அவர்களின் அத்தியாவசிய பணிகளும் கூலித் தொழிலாளர்களின் வருமானமும் பாதிக்கப்படுகிறது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.