Skip to main content

15 - 18 வயது நிரம்பியோருக்கு தடுப்பூசி; வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

Vaccine for 15- to 18-year-olds - Guidelines Release!

 

தமிழ்நாட்டில் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நாளை (03/01/2022) முதல் 15 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயது (அல்லது) அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் கோவின் 2.O போர்ட்டலில் (CoWIN 2.O PORTAL) பதிவு செய்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. பிறந்த ஆண்டு 2007 அல்லது அதற்கு முன் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்கள். 

 

கோவின் 2.0 தளத்தில் யனாளிகள் சுயமாக பதிவு செய்துக் கொள்ளலாம் (அல்லது) ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் இணையத்தில் பதிவு செய்யலாம் (அல்லது) தனிப்பட்ட மொபைல் எண் மூலம் புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதில், 10- ஆம் வகுப்புக்கான பதிவெண் (அல்லது) ஆதார் எண் (அல்லது) பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திப் பதிவு செய்துக் கொள்ளலாம். 

 

இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "தடுப்பூசிகளைக் கொண்டு வரும் குழுவுடன் ஒருங்கிணைக்கும் தொடர்பு அதிகாரியாக செயல்பட ஒரு ஆசிரியரை நியமிக்குமாறு தலைமை ஆசிரியரை அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியைப் போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடவசதியை வழங்கிடுமாறு அனைத்துப் பள்ளி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்" என பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏழை சிறுவர்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுத்த சமூக ஆர்வலர்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 social activist who bought new clothes for poor childrens

 

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் தன்னால் முடிந்த சமூக சேவைகளைச் செய்து வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளுக்குப் புத்தாடைகளை வழங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு, வேலூரில் நிரந்தர வீடு கூட இல்லாமல் வாசிக்கும் 11 நரிக்குறவர் குழந்தைகளை வேலூரில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்து வந்தார்.

 

அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த உடைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்ல, ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்த குழந்தைகள் தங்களுக்கான உடைகளை அவர்களே தேர்வு செய்து புதுவித அனுபவத்தைப் பெற்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை இவர்களும் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்து வருவதாக அன்பரசன் தெரிவித்தார்.  

 

 

Next Story

வாலிபரிடம் வழிப்பறி; 4 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

trichy painter incident four children involved issue

 

திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் ராஜ்குமார் (வயது 30). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் திருச்சி பொன்மலை பட்டியில் உள்ள ஒரு டிரைவிங் பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கத்தி முனையில் இவரிடம் மிரட்டி பணத்தை பறித்து சென்றனர்.

 

இதுகுறித்து ராஜ்குமார் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் திருச்சி பொன்மலை, பொன்மலைப்பட்டி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை பொன்மலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வழிப்பறி சம்பவத்தில் 4 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.