தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து மீண்டும் தமிழ்நாட்டில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்து கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படு செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.