Skip to main content

திமுக தலைவராக ஸ்டாலினை முன்மொழிந்த  எ.வ.வேலு!

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
v


திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு ஆகஸ்ட் 14ந்தேதி திமுக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற துவங்கியுள்ளது. 


திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், 16.08.2018 ந்தேதி  காலை 11.00மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் செயற்குழுகூட்டம் துவங்கியது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், கழக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ முன்னிலை வகித்தனர். கலைஞர் மறைவிற்கு எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


மாநில செயற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ பேசினார். அதன்பின்னர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாய் நிறைவேற்றப்பட்டது.

 

v

தீர்மானம் : 1

ஒப்பாரும் மிக்காருமில்லா தமிழனத்தின் தனிப்பெருந்தலைவர், தமிழாய்ந்த முத்தமிழ் அறிஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 ஆண்டு தலைவர் திராவிட பேரியகத்தின் முதுபெருந்தலைவர் போட்டியிட்ட 13 பொதுதேர்தல்களிலும் தோல்வியே காணாத சட்டப்பேரவை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், 19ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சர், வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழக இருக்கட்டும் என்று 14வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, கல்லக்குடி பெயர் மாற்ற தண்டவாளம் தலை வைத்து, மொழிப்போரில் தமிழுக்காக தனிமைச் சிறை அனுபவித்து, தமிழ் வாழ தமிழர்  வாழ, தளராமல் உழைத்த தலைவர், உலகத்து தமிழர்களில் ஒருவருக்கு கொடுமையென்றால், உடனே குரல் கொடுத்தது உரிமை காத்து மானம் காத்த தலைவர், அரசண்ட காலத்தில் விவசாயி, தொழிலாளி, ஆசிரியர், அரசு ஊழியர் அனைத்து நிலை மக்களுக்கும் திட்டம் தந்து ஆதரித்த முதலமைச்சர். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலம் காத்தவர் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி கண்ட நாயகர். பெண்ணுரிமை போற்றியவர் இந்திய திருநாட்டிற்கே ஏராள முன்னோடி திட்டங்களைத்தந்தவர்.


எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், கவிஞர், பத்திரிக்கையாளர், நாடகஆசிரியர், நாடக நடிகர், திரைப்பட கதை, வசன கர்த்தா, திரை இசைப்பாடல் ஆசிரியர் என தொட்ட துறை எல்லாம் முத்திரை பதித்தவர். சுயமரியாதை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு என வாழ்நாள் முழுவதும் பெரியாரின் பிள்ளையாய் அண்ணாவின் தம்பியாய் திகழ்ந்தவர்.

தேசிய அரசியலில் கோலோச்சியவர், அரசியல் வாழ்க்கையில்

புயல் அடித்த போதும், பூம்பம் நிகழ்ந்த போதும்,

அலைஅடித்து சாய்ந்த போதும், ஆபத்து சூழ்ந்த போதும்,

இடர்கள் கோடி நேர்ந்த போதும், ஏமாற்றம் நிகழ்ந்த போதும்,

துரோகங்கள் தொடர்ந்த போதும், மலைஉடைந்து சரிந்த போதும்,

மனம் சலியா மாமனிதர், கழகத்தை காத்த தீரர்.


திருக்குவளை எனும் சிறிய கிராமத்தில் எளிய விவாசய குடும்பத்தில் பிறந்த உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இறுதிவரை கொள்கை வழிநின்று ஓயாமல் உழைத்த ஓய்வறியா தலைவர் தனது 95வயதில் 81 ஆண்டு கால மொழி, இனம், நாடு பகுத்தறிவு சுயமரியாதை, சமூக நீதி, என உழைத்து ஓராயிரம் ஆண்டு ஓங்கித்தவகிடந்து வாரது வந்துதித்த வரலாற்று நாயகன் இறுதியில் ஓய்வு கொடுத்து தன்னுடைய ஆருயில் அண்ணன் நம்முடைய தலைவர், பேரறிஞர் அண்ணா அவர்கள் மீளாத்துயில் கொண்டுள்ள இடத்தருகில் துயில் கொண்டுவிட்டார்.


நம்முடைய இனத்தலைவர் கலைஞர் அவர்களின புகழ் காருள்ள வரை, கதிர் நிலவு உள்ளவரை, பாருள்ளவரை கழக உடன் பிறப்புகளாகிய நாம்காத்து அவர் கண்ட காத்து கடைபிடிப்போம் நிறைவேற்றுவோம் உன உறுதிஏற்று, தலைவர் கலைஞர் அவர்களின் பிரிவால் பெரிதும் துயருற்ற கழக செயல்தலைவர் தளபதி அவர்களுக்கும்,  தலைவர் கலைஞர் அவர்களின் கோடிக்கணக்கான உடன் பிறப்புகளுக்கும் ஆழ்ந்த வருத்தத்தையும், தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் இம்மாவட் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் : 2


தலைவர் கலைஞர் அவர்களின், பேரிழப்புக்கு பிறகு கழகத்தைக் கட்டிக்காக்க, கழகத்தை வழிநடத்த 11/2 கோடி கழகதொண்டர்களின் ஏகோபித்த எண்ணம் நிறைவேற, கழக செயல்தலைவர் தளபதி அவர்களை திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவராக பொறுப்பெற்க இம்மாவட்ட கழகம் ஏகமனதாக முன்மொழிகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதிகாரத்தை கைப்பற்றுவேன் என திமுகவில் இருந்து நீக்கப்பட்ட  அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் ஸ்டாலினை, திமுகவின் தலைவராக்க மாவட்ட கமிட்டிகள் தீர்மானம் இயற்ற துவங்கியுள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.