Skip to main content

மதுரை மத்திய சிறைக்கு இரவோடு இரவாக உதித் சூர்யாவும், தந்தையும் மாற்றம்!

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் வழக்கை சிபிசிஐடியினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பதியில் கைது செய்யப்பட்ட உதித்சூர்யா அவரின் தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரையும் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்தனர். 

 

neet


இந்தவிசாரணையின் போது சிபிசிஐடி தென்மண்டல கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஜெகதீஷ் குமார், தேனி சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி ஆகியோர் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன்பின் தேனி அருகே உள்ள புதுப்பட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பன்னீர்செல்வம் முன் ஆஜர்படுத்தினர். அதனடிப்படையில் நீதியரசரும் இருவரையும் 15 நாள் காவலில்  வைக்க உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட சிறைச்சாலைக்கு உதித்சூர்யாவையும், அவரின் தந்தை வெங்கடேசனையும் கொண்டு சென்றனர். அப்பொழுது அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசிய போலீசார் திடீரென இருவரையும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

 

neet


இதுசம்பந்தமாக போலீஸார் சிலரிடம் கேட்டபோது, கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் உதித்சூர்யாவையும், அவரின் தந்தையையும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் பத்து மணிக்கு முன்பாகவே சிறைச்சாலைக்கு சென்றுவிட்டனர். இருந்தபோதும் நீட் ஆள்மாறாட்ட வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெரிய வழக்காக மாறிவிட்டது. அதன்மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  அதனால்  மதுரை மத்திய சிறையில் அடைத்தான் சரியாக இருக்கு என தேனி சிறைச்சாலை சூப்பிரண்டு கூறிவிட்டார். உடனே இத்தகவல்களை மேலிடத்திற்கு பேசி அதற்கான அனுமதி பெறப்பட்டது. அதன் பிறகுதான் மதுரையிலுள்ள மத்திய சிறைக்கு உதித்சூர்யாவையும், அவருடைய தந்தை வெங்கடேஷையும் இரவோடு இரவாக கொண்டு சென்று அடைத்தோம் என்று கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.