Skip to main content

தேர்தல் பிரச்சாரத்தில் தேங்காய் உரித்த உதயநிதிஸ்டாலின்

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 


திமுகவில் உள்ள இளைஞர் அணியின் மாநில இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் உதயநிதிஸ்டாலின். அவர் அதிகாரப்பூர்வமாக கட்சி பதவிக்கு வந்தபின் நடைபெறும் தேர்தல் என்பது வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலாகும்.

 

n

 

இந்த தொகுதிக்கான பிரச்சாரத்தில் உதயநிதிஸ்டாலின் கலந்துக்கொள்வது என்பது சந்தேகமாக இருந்துவந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும், திமுக வேட்பாளருமான கதிர்ஆனந்த் வெற்றி பெறக்கூடாது என உதயநிதிஸ்டாலின் நினைப்பதால் தான் அவர் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்றார் தேர்தல் களத்தில்.

 

n


இந்நிலையில் 3 நாள் பிரச்சாரமாக வேலூருக்கு வந்துள்ளார் உதயநிதி. ஜீலை 29ந்தேதி காலை வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் உதயநிதி. தொகுதி பொறுப்பாளரான முத்துச்சாமியுடன், தொகுதியில் உள்ள பல கிராமங்களுக்கும் சென்று கிராமப்புற மக்களிடம் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்துக்காக வாக்கு கேட்டார்.

 

n


கலைஞரின் பேரன் வந்துள்ளேன், தளபதி ஸ்டாலின் மகன் வந்துள்ளேன், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக்கேட்டு வந்துள்ளேன் என பிரச்சாரம் செய்தார். வயல் வெளிகளில் வேலை செய்யும் பெண்களிடம் சென்று வாக்குகேட்டவர், அப்போது அவர்கள் சொன்ன குறைகளையும் கேட்டவர், திமுக ஆட்சி வந்ததும் இவைகளை தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்றார்.


அம்பலூர் என்ற பகுதியில் உதயநிதியின் பிரச்சார வேன் வந்தபோது, தென்னந்தோப்பு ஒன்றில் ஆயிரக்கணக்கான தேங்காய் வைக்கப்பட்டிருந்தது. அதனை தொழிலாளர்கள் தேங்காயின் மட்டையை உரித்துக்கொண்டு இருந்தனர். அதனைப்பார்த்து வியந்த உதயநிதி, அந்த தொழிலாளியிடம் எப்படி தேங்காய் மட்டையை உரிக்க வேண்டும் என கேட்டு அதன்படியே செய்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள் (படங்கள்)

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று  (18.01.2023) காலை  11.00 மணியளவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  சார்பில்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து  நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

 

Next Story

கதறி அழுத பொன்முடி; ஆறுதல் தெரிவித்த உதயநிதி

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Ponmudi cried; Udhayanidhi expressed his condolences

 

அமைச்சர் பொன்முடியின் தம்பியான தியாகராஜன் பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவராவார். கடந்த சில நாட்களாக தியாகராஜன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் தியாகராஜன் உயிரிழந்தார்.

 

இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மருத்துவர் தியாகராஜனுக்கு பத்மினி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். மருத்துவர் தியாகராஜனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அமைச்சர் பொன்முடியின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

 

மருத்துவர் தியாகராஜனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலினிடம் தம்பியை இழந்து வாடும் அமைச்சர் பொன்முடி கதறி அழுதார். அவருக்கு உதயநிதி ஆறுதல் தெரிவித்தார். உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.