வாகனத்தின் முகப்பு விளக்கை பாய்ச்சி காவல் ஆய்வாளரின் தங்கச் சங்கிலி பறிப்பு!

The vehicle's front light bulb was passed on the police inspector face and gold chain snatched

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்துக்கான க்யூ பிரான்ச் அலுவலகம் திருப்பத்தூர் நகரில் உள்ளது. இதன் ஆய்வாளராக இருப்பவர் புனிதா. ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியில் குடியிருக்கிறார். ஜீலை 24ஆம் தேதி இரவு தன்னுடைய பணியை முடித்துக்கொண்டு இரவு 11 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்லும்போது, இரண்டு பேர் வழிமறித்து பெண் காவல் ஆய்வாளரின் முகத்தில் தங்களுடைய வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளனர்.

கண் கூச்சத்தால் கையைக் கொண்டு வெளிச்சத்தை தடுத்தபோது மிகைப்படுத்தி அடித்துள்ளனர். உடனடியாக பக்கத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரும், பெண் காவல் ஆய்வாளரின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினர். இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அங்கிருந்து வந்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். பெண் காவல் ஆய்வாளரிடமே நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறை தேடிவருகிறது.

chain snatching Police Inspector thirupathur
இதையும் படியுங்கள்
Subscribe