இன்று (04/06/2021) காணொளி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் இணைந்து கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நான்கு லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் 3 கோடி ரூபாய்) வழங்கினர்.

ஏற்கனவே ரூபாய் 20 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கிய நிலையில், மேலும் ரூபாய் 3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.